புதுடில்லி, ஜூன் 22- காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட தலை வர்கள் 20.6.2022 அன்று குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்தை சந்தித்தனர்.
சந்திப்பில், அக்னி பத் திட்டத்தை திரும்பப் பெறக் கோரிய போராட்டத்தின் போது, காங்கிரஸ் கட்சி எம்.பி.க்களை காவலர்கள் மோசமாக நடத்திய விவகாரம், ராகுல் காந்தியை அமலாக்கத்துறை விசாரணை செய்கின்ற விவ காரம் போன்றது குறித்து பேசினர்.
காங்கிரஸ் பிரதிநிதிகள் குழுவில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லி கார்ஜுன் கார்கே, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ராஜஸ்தான் முதல மைச்சர் அசோக் கெலாட், சத்தீஸ்கரு முதலமைச்சர் பூபேஷ் பாகேல், மூத்த தலைவர்கள் பி.சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ், கே.சி. வேணுகோ
பால் ஆகியோர் இடம்பெற்றனர்.
சந்திப்புக்குப் பின் பேசிய மல்லிகார்ஜுன் கார்கே,
"அக்னி பத்" திட்டம் குறித்து ஒன்றிய அரசு எந்த ஆலோசனையும் செய்ய வில்லை. நாடாளுமன்றத்தி லும் இந்த திட்டம் சமர்ப் பிக்கப்படவில்லை.
இதை குடியரசுத் தலைவரிடம் தெரிவித்தோம். இது எங்களின் ஜனநாயக உரிமை களை மீறும் செயல் என்று நாங்கள் கூறினோம்.
இதனை கவனத்தில் கொள்ளுமாறு குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
ப.சிதம்பரம் பேசுகையில், "காங்கிரஸ் தலைவர்கள் மீதான காவல்துறை அட்டூ ழியங்கள் குறித்து தெரிவித் தோம்.
இது குறித்து விசாரணை நடத்தி, இந்த விவகாரத்தை நாடாளு மன்ற சிறப்புரிமைக் குழு வுக்கு அனுப்புமாறு குடிய ரசுத் தலைவரிடம் கேட்டுக் கொண்டுள்ளோம்.
இதுபற்றி பரிசீலித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக அவர் உறுதியளித்துள்ளார்" என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment