மிகவும் காலம் கடந்து மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத் தொகை வழங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 1, 2022

மிகவும் காலம் கடந்து மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத் தொகை வழங்கல்

சென்னை, ஜூன் 1 நாடு முழுவதும் 2017ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப் பட்டது. ஜிஎஸ்டி அமல்படுத்தப் படுவ தால் மாநிலங்களின் சொந்த வரி வருவாய் பாதிக்கப் படும் என்ப தால், 5 ஆண்டு களுக்கு இந்த பாதிப்பின் சுமையை குறைக்கும் வகையில் இழப்பீடு வழங் கப்படும் என்று ஒன்றிய அரசு உறுதி அளித்தது. அதன் அடிப்படை யில், மாநிலங் களுக்கு இழப்பீடு வழங்க, சில பொருட்களின் மீது கூடுதல் வரி விதிக்கப் பட்டு, அந்த வருவாய் இழப்பீட்டுக்கான நிதி யத்தில் சேர்க்கப்பட்டது. அந்த தொகை கடந்த 2017 ஜூலை முதல் மாநிலங்களுக்கு இழப் பீடாக பிரித்து வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 2017- - 2018, 2018- - 2019 நிதி யாண் டுகளில் இழப்பீட்டு நிதியத்தில் இருந்து 2 மாதங் களுக்கு ஒருமுறை இழப்பீட்டுத் தொகை விடுவிக்கப்பட்டது. மாநிலங்களின் வருவாய் 14 சதவீதம் உயர்ந்த போதும், அதே அளவுக்கு ஒன்றிய அரசால் விதிக்கப்பட்ட மேல் வரி வசூல் உயரவில்லை. இதனிடையே, கரோனா பாதிப்பு காரணமாக நிர்ணயிக்கப்பட்ட வருவாய்க்  கும், மேல் வரி வருவாய் உட் பட கிடைத்த வருவாய்க்கும் இடை யில் அதிக இடைவெளி உரு வானது. இதனால், மாநிலங் களுக்கு போதிய அளவு இழப் பீட்டை ஒன்றிய அரசால் வழங்க இயலாத நிலை ஏற்பட்டது.

இதை நிவர்த்தி செய்ய, ஒன்றிய அரசு கடன் வாங்கி, இழப்பீட்டுத் தொகையை வழங்க முடிவெடுத்தது. இதற்கு மாநில அரசுகளும் இசைவு தெரிவித்தன. அதன்படி, கடந்த 2020- - 2021 நிதியாண்டில் ரூ.1.1 லட்சம் கோடியும், 2021- -2022இல் ரூ.1.59 லட்சம் கோடியும் கடனாக பெற்றது. இதன்மூலம், மேல் வரி வருவாயில் ஏற்பட்ட இழப்பு சீரமைக்கப்பட்டது.

கரோனா பாதிப்பு குறைந்த நிலையில், ஒன்றிய, மாநில அரசுகள் எடுத்த முயற்சிகளின் காரணமாக ஒன்றிய அரசின் மேல் வரி உட்பட மாதாந்திர ஜிஎஸ்டி வசூலில் பெரிய அளவில் முன் னேற்றம் ஏற்பட் டுள்ளது. இதையடுத்து, மாநிலங் களுக்கு ஏப்ரல், மே மாதங்களுக் கான முழுமையான ஜிஎஸ்டி இழப் பீட்டுத் தொகை யை ஒன்றிய அரசு விடுவித்துள்ளது.

இந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் மாநிலங் களுக்கு ரூ.17,973 கோடி இழப் பீட்டுத் தொகை நிலு வை வழங்க வேண்டி யுள்ளது. அத்துடன் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களுக்கான நிலுவை ரூ.21,322 கோடி யாகும். மேலும், கடந்த ஜனவரி வரையிலான இழப்பீட்டு தொகை நிலுவை ரூ.47,617 கோடி என மொத்தமாக ரூ.86, 912 கோடியை ஒன்றிய அரசு விடுவித் துள்ளது. இதன்மூலம் தற்போது வரை மாநிலங்களுக்கு இழப் பீட்டுத் தொகை நிலுவை ஏதும் இல்லை என்றும், இனி ஜூன் மாதத் துக்கான இழப் பீடு மட்டுமே வழங்கப் பட வேண்டும் என்றும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டுக்கு ரூ.9602 கோடி

ஒன்றிய அரசு விடுவித்துள்ள இழப் பீட்டுத் தொகையில், தமிழ்நாடுத்துக்கு ரூ.9,602 கோடி கிடைக்கும். புதுச்சேரிக்கு ரூ.576 கோடி வழங்கப்பட உள்ளது. அதிக பட்சமாக, மகாராட்டிர மாநிலத் துக்கு ரூ.14,145 கோடியும், உத்தர பிரதேசத் துக்கு ரூ.8,874 கோடியும், கர்நாடகாவுக்கு ரூ.8,633 கோடியும், கேரளாவுக்கு ரூ.5,693 கோடியும், தெலங்கானா வுக்கு ரூ.296 கோடியும், ஆந்தி ராவுக்கு ரூ.3,199 கோடியும், டில்லிக்கு ரூ.8,012 கோடியும் வழங்கப்படுகிறது. ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத் தொகை விடுவிப்பு என்பது, மாநிலங்கள் இந்த நிதியாண்டின் மூலதனச் செலவு உள்ளிட்ட திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றுவதை உறுதிசெய்ய உதவும்.

முதலமைச்சர் கோரிக்கை

கடந்த மே 26ஆம் தேதி சென் னையில் நடந்த அரசு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். அந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘‘தமிழ்நாடுத்துக்கு ரூ.14,006 கோடி ஜிஎஸ்டி நிலுவைத் தெகையை உடனடியாக விடுவிக்க வேண் டும். ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கு வதற்கான கால அவகாசத்தை வரும் ஜூன் மாதம் முதல் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தார். இழப்பீடுக்கான கால நீட்டிப்பு ஜூன் மாதத்துக்கு பிறகு இல்லை என்று கடந்த ஏப்ரல் 5ஆம் தேதியே ஒன்றிய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. அதேநேரம், ஏற்கெனவே வழங்கப்பட்ட இழப்பீடு தொடர் பான கடன்களை அடைப்பதற் காக, வரும் 2026ஆம் ஆண்டு வரை இழப்பீட்டு மேல் வரி வசூலிக்க ஒன்றிய அரசு முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment