பெங்களுரு ஜூன் 28 கருநாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் (தாய், தந்தை, 2 மகள்கள்), நித்தியானந்தா நடத்தி வரும் பிடதி ஆசிரமத்தில் சேவை செய்துள்ளனர்.
பின்னர், மூத்த மகளை மட்டும் அழைத்துக் கொண்டு ஆசிரமத்தில் இருந்து பெற்றோர் வெளியேறினர். 20 வயதுள்ள இளையமகள், நித்தியானந்தா பக்தர்களில் ஒருவராக ஆசிரமத்தில் தங்கியுள்ளார்.
அவரை பார்க்க பெற்றோர் செல் லும்போது, ஆசிரமத் தில் உள்ளவர்கள் தடுத்துள்ளனர். இதனால் கருநாடக காவல்துறை துணையுடன் பிடதி ஆசிரமத்தில் தேடிப் பார்த்தபோது 20 வயது மகளை காணவில்லை.
மகள் குறித்த தகவல் ஏதும் கிடைக் காமல் விரக்தியில் இருந்த பெற்றோ ருக்கு, திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ஆசிரமத்தில் இளைய மகள் தங்கி இருக்கலாம் என தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, கிரிவலப் பாதையில் உள்ள ஆசிரமத்தில், இளைய மகள் குறித்து பெற்றோர் விசாரித்தபோது, உரிய பதில் கிடைக்க வில்லை.
இதுதொடர்பாக, அவர்கள் கொடுத்த புகாரின்பேரில் திருவண்ணா ம லை கிரிவலப் பாதையில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில், காவல் துறை தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தேடியும், ஆசிரமத்தில் இளம்பெண் இல்லை என தெரியவந்தது. மேலும், அவர் குறித்த விபரங்களும் காவல் துறைக்கு கிடைக்கவில்லை.
இதனால், இளம்பெண்ணின் பெற்றோர் கருநா டகாவுக்கு திரும்பிச் சென்றனர்
No comments:
Post a Comment