பாஜக தனக்கென ஆயுதப்படைகளை உருவாக்க முயற்சி: மம்தா சாடல்கொல்கத்தா, ஜூன் 22- அக்னிபத் திட்டம் மூலம் பாஜக தனக்கென சொந் தமாக ஆயுதப்படையை உருவாக்க முயற்சிக்கிறது. மேலும் ஒவ்வொரு ஆண் டும் 2 கோடி வேலை வாய்ப்பு வழங்குவதாக கூறியவர்கள் 2024 மக் களை தேர்தலுக்கு முன்பே அக்னிபத் திட்டம் மூலம் மக்களை ஏமாற்றி முட் டாளாக்க முயற்சிக்கின் றனர்'' என மம்தா கடுமை யாக விமர்சித்துள்ளார்.
மேற்கு வங்க முதல மைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா கூறியுள்ளதாவது: ஒன் றிய பா.ஜ.க. அரசு பாது காப்பு படையினரை அவ மானப்படுத்தும் வகை யில் செயல்பட்டு வருகி றது. அக்னிவீரர்களை பா. ஜ.க.வின் அலுவலகத்தில் ‘செக்யூரிட்டி'யாக சேர்ப் பதாக கூறுகின்றனர். இது கண்டிக்கத்தக்கது.
அக்னிபத் திட்டம் மூலம் பா.ஜ.க. தனக்கென சொந்தமாக ஆயதப் படையை உருவாக்க விரும்புகிறது. ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி வேலை வாய்ப்பு வழங்குவதாக கூறியவர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர். அக்னி பத் திட்டம் என்பது 2024 தேர்தலுக்கு முன்பே மக்களை முட்டாளாக்க பார்க்கின்றனர். இந்த திட் டத்தில் 4 ஆண்டு பணிக்கு பிறகு அவர்கள் என்ன செய்வார்கள்?'' என விமர் சனம் செய்துள்ளார்.
No comments:
Post a Comment