ஓசூர் கழக மாவட்டத்தில் 'விடுதலை' சந்தா சேகரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 29, 2022

ஓசூர் கழக மாவட்டத்தில் 'விடுதலை' சந்தா சேகரிப்பு


இல்லம் தேடி ‘விடுதலை'
மதுரையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் தீர்மானத்தின்படி கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அறிவிப்பின் படி இல்லம் தேடி விடுதலை சேர்க்கும் பணியில் முனைப்புடன் தொடர்ந்து செயலாற்றப் படுகிறது.
 அதன்படி ஜூன் 30 தர்மபுரி மாவட்டத்தில் ஒவ்வொரு தோழர்களையும் சந்தித்து விடுதலை சந்தா சேர்க்கும் பணிக்காக மாநில திராவிடர் கழக அமைப்பாளர் ஒரத்தநாடு.இரா. குணசேகரன், மாநில அமைப்பு செயலாளர் ஊமை .ஜெயராமன், மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மண்டலத் தலைவர் விடுதலை. தமிழ்ச் செல்வன், மற்றும் மாவட்ட தலைவர்,மு.பரமசிவன், செயலா ளர் பீமா, தமிழ் பிரபாகரன், சி.காமராஜ், அமைப்பாளர் மண்டல ஆசிரியர் அணி பொறுப்பாளர் இர. கிருஷ்ண மூர்த்தி, மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ச.ராஜேந் திரன், செயலாளர் கதிர், செந்தில் மற்றும் அனைத்து அணி மாநில மண்டல மாவட்ட நகர ஒன்றிய கிளை கழக பொறுப் பாளர்கள் மற்றும் சமூக சிந்தனையாளர்கள் இயக்கத்தின் பற்றாளர்கள் ஆகியோரைச் சந்தித்து தமிழர் தலைவர் எண்ணங்களுக்கு ஏற்றார் போல் நமது தருமபுரி மாவட் டத்தின் களப்பணியை செயல்படுத்திட அனைவரையும் நாடி வருகின்றோம் இப்படிக்கு. மாவட்ட திராவிடர் கழகம் தருமபுரி.

கழக அமைப்பாளர் இரா.குணசேரன், அமைப்பு செயலாளர் ஊமை செயராமன் ஆகியோரிடம் ஓசூர் மாவட்டதலைவர் சு.வனவேந்தன் 20 சந்தா  வழங்கினார். மாவட்ட மகளிர்பாசறை தலைவர் பா.கண்மணி, மாநில வழக்குரைஞர் மாணவர் கழக அமைப்பாளர் கா.க.வெற்றி ஆகியோர் 50 சந்தாவிற்கான இரசீது புத்தகங்களை பெற்று கொண்டனர்.

ஓசூர் மேயர் எஸ்.ஏ.சத்யா  10 ஆண்டு விடுதலை சந்தா வழங்கினார். 




No comments:

Post a Comment