45 ஏக்கர் - ரூ.314 கோடியில் வண்டலூரில் புதிய பேருந்து முனையம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 29, 2022

45 ஏக்கர் - ரூ.314 கோடியில் வண்டலூரில் புதிய பேருந்து முனையம்

சென்னை, ஜூன் 29  சென்னை வண்டலூர் அடுத்த கிளாம் பாக்கத்தில் 44.75 ஏக்கரில், ரூ.393.74 கோடியில், ஒரே வளா கத்தில் அனைத்து அரசு, தனி யார் பேருந்துகளையும் இயக்கும் வசதிகளுடன் புதிய பேருந்து முனையம் அமைக்கப்பட்டு வரு கிறது. இது செப்டம்பர் மாதம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப் படும் என அறிவிக்கப்பட் டுள்ளது.

தமிழ்நாட்டின் மிகப் பெரிய பேருந்து நிலையமாக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் இங்கிருந்துதான் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால், சென்னையில் அடிக்கடி போக் குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.  

இதை தவிர்க்க, வெவ்வேறு மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் சென்னையை சுற்றி இருக்கும் பல்வேறு 5 பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன.

இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், ரூ.393.74 கோடியில் வண்டலூர் அடுத்த கிளாம் பாக்கத்தில், 44.75 ஏக்கரில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

அரசு புறநகர் பேருந்துகள், தனியார் ஆம்னி பேருந்துகள், சென்னை மாநகரப் பேருந்துகள் என அனைத்தும், ஒரே இடத் தில் இருந்து இயங்கும் வகையில் இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது.  

இந்நிலையில், வரும் செப்டம்பர் முதல் இந்தப் புதிய பேருந்து நிலையம் செயல்படத் தொடங்கும் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது.

மொத்தம் 6 லட்சத்து 40 ஆயிரம் சதுர அடியில், நவீன தொழில்நுட்பத்தில் இரண்டு அடித்தளங்கள், தரைதளம், முதல் தளம் என கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரு கின்றன. முதல் அடித்தளத்தில் 260 கார்கள், 568 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையி லும் இரண்டாவது அடித்தளத் தில், 84 கார்கள், 2,230 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையிலும் அமைக்கப்படுகிறது.

தரைதளம், முதல் தளத்தில் பயணிகளுக்கான வசதிகளும், ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட போக்குவரத்துப் பணியா ளர்களுக்கான வசதிகளும் ஏற் படுத்தப்படுகின்றன.

கடைகள், உணவகங்கள், துரித உணவகங்கள், பயணச் சீட்டு வழங்கும் இடங்கள், மருத் துவ மய்யம், மருத்துவமனை, தாய்ப்பால் ஊட்டும் அறை, ஏடிஎம் மய்யம், பொருள்கள் பாதுகாப்பு அறை, பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய கண்காணிப்பு கேமராக்கள் அறை, தரைதளத்தின் பல்வேறு பகுதிகளில் ஆண், பெண் கழிப் பறைகள், சிறுநீர் கழிப்பிடம், முகம் கழுவுமிடம் அமைய உள்ளன.

சுமார் 14 ஏக்கரில் கட்டப் படும் பேருந்துகள் நிறுத்துமிடத் தில், ஒரே நேரத்தில், 130 அரசுப் பேருந்துகள், 85 தனியார் ஆம்னி பேருந்துகள் நிறுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு செல்ல வசதியாக 5 ஏக்கரில் 3,500 மாநகரப் பேருந்துகள் வந்து செல்ல மேற்கூரையுடன் கூடிய நடைமேடையும் அமைக் கப்பட்டுள்ளது.

நவீன வசதிகளுடன் அனைத்து கட்டுமானப் பணி களும் நடைபெற்று வருகிறது. சுமார் 60 சதவீதத்துக்கு மேல் பிரதானப் பணிகள் நடந்து முடிந்துள்ளன.

 இதுகுறித்து சிஎம்டிஏ கட்டுமான பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:

செப்டம்பரில் புதிய பேருந்து நிலையம் திறக்க அனைத்து பணிகளும் வேகமாக நடை பெற்று வருகின்றன. தற்போது 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட முக்கிய பணிகள் முடிந்துள்ளன. மற்றவை விரைந்து முடிக்கக் கூடிய பணிகள்தான். தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் இங் கிருந்து இயக்கப்படும். அதே போல வட மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளும் வந்து செல்லும் வகையில் வசதி ஏற் படுத்தப்பட உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் சுமார் 200 மாநகர பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 

அடுத்த ஓராண்டுக்குள் இதர அனைத்து பணிகளும் நிறைவு பெறும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment