மும்பை, ஜூன் 26 - ஆட்சி இருந்தாலும் சரி, இல்லாமல் போனாலும் சரி, பாஜகவின் மிரட்டலுக்கு பயந்துபோக மாட்டோம்; எங்களின் தொண் டர்கள் இன்னும் சாலையில் இறங்கவில்லை என்பதை மோடி, அமித்ஷா ஆகியோருக்கு சொல்ல விரும்புகிறோம் என்று சிவசேனா மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத் எச்சரித் துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறி யிருப்பதாவது:
“மகா விகாஸ் அரசைக் காப்பாற்ற முயன்றால், சரத் பவார் வீட்டுக்குச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார் என ஒன்றிய பாஜக அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.
மகா விகாஸ் அரசு தப்பி னாலும் இல்லா விட்டாலும், சரத் பவாரை நோக்கி இது போல பேசுவதை ஏற்க முடி யாது. பிரதமர் மோடியும், அமித் ஷாவும் நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள்.. உங்கள் தலைவர்கள் சிலர் சரத் பவாரை மிரட்டுகிறார்கள். இது இப் போது சட்டப் போராட்டமாக மட்டுமே உள்ளது. சிவசேனா தொண்டர்கள் இதுவரை சாலைகளில் இறங்கவில்லை. தேவைப்பட்டால், நாங்கள் தெருவில் இறங்கியும் போராட் டம் நடத்துவோம்.
உத்தவ் தாக்கரே அரசைக் கவிழ்க்கத் தேவையான சட்ட மன்ற உறுப்பி னர்கள் தன்னிடம் உள்ளதாக ஏக்நாத் ஷிண்டே கூறுவதைப் பொறுத்தவரை, இதில் சில விதிகள் உள்ளன. இதில் உச்சநீதிமன்றத்தின் உத் தரவுகள் உள்ளன. இது இப்போது சட்டப் போராட்டம். ஒரு சிலர் அவருடன் 40 பேர் இருப்பதாகச் சொல்கிறார்கள். இன்னும் சிலர் வேறு மாதிரி கூறு கிறார்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மும்பைக்கு வந்தால்தான் எல் லாம் தெரியும்.
வரும் நாட்களில் மோதல் என்பது எண்ணிக்கை (சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆதரவு), பேப்பர்கள் (சட்டங்கள்), வீதிகளாக (போராட்டம்) இருக்கும். இந்த மூன்றிலும் சிவசேனா நிச்சயம் வெல்லும். அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.
இவ்வாறு சஞ்சய் ராவத் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment