காளாப்பூர் பெரி.பெருமாள் மறைவு கழகத் தலைவர் இரங்கல் - ஆறுதல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 18, 2022

காளாப்பூர் பெரி.பெருமாள் மறைவு கழகத் தலைவர் இரங்கல் - ஆறுதல்

சிவகங்கை மாவட்ட திராவிடர் கழக செயலாளர் காளாப்பூர் பெ.ராசாராம் அவர்களின் தந்தையார் பெரி.பெருமாள் (வயது 86) நேற்று (17.6.2022) மாலை 4.30 மணியளவில் அவரது சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகில் உள்ள காளாப்பூரில் இயற்கை எய் தினார். அவரின் மறைவு தகவல் அறிந்ததும் திராவிடர் கழகத் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அன்னாரின் குடும்பத்தாரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தார்.

தி.மு.க. தொடங்கிய காலத்திலிருந்து இறுதி வரை உறுப்பினராக இருந்தார். தி.மு.க. நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் கலந்து கொண்டு சிறை சென்றவர். அன்னாருக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் இளைய மகன் பெ.ராசாராம் சிவகங்கை மாவட்ட கழக செயலாளர் ஆவார். அன்னாரது இறுதி நிகழ்வு இன்று (18.6.2022) மாலை நடைபெறுகிறது.



சிவகங்கை மாவட்ட செயலாளர் பெ.ராசாராம் அவர்களின் தந்தையார் பெரி.பெருமாள் (வயது 86) அவர்களின் உடலுக்கு காரைக்குடி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மரியாதை செய்யப் பட்டது.
நிகழ்வில் காரைக்குடி மாவட்ட தலைவர் அரங்கசாமி, மாவட்ட செயலாளர் ம.கு.வைகறை, நகர செயலாளர் தி.க. கலைமணி, நகர தலைவர் ந.ஜெகதீசன் ஆகியோர் பங்கேற்றனர்.



No comments:

Post a Comment