சிவகங்கை மாவட்ட திராவிடர் கழக செயலாளர் காளாப்பூர் பெ.ராசாராம் அவர்களின் தந்தையார் பெரி.பெருமாள் (வயது 86) நேற்று (17.6.2022) மாலை 4.30 மணியளவில் அவரது சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகில் உள்ள காளாப்பூரில் இயற்கை எய் தினார். அவரின் மறைவு தகவல் அறிந்ததும் திராவிடர் கழகத் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அன்னாரின் குடும்பத்தாரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தார்.
தி.மு.க. தொடங்கிய காலத்திலிருந்து இறுதி வரை உறுப்பினராக இருந்தார். தி.மு.க. நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் கலந்து கொண்டு சிறை சென்றவர். அன்னாருக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் இளைய மகன் பெ.ராசாராம் சிவகங்கை மாவட்ட கழக செயலாளர் ஆவார். அன்னாரது இறுதி நிகழ்வு இன்று (18.6.2022) மாலை நடைபெறுகிறது.
No comments:
Post a Comment