அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தமிழர் தலைவரைச் சந்தித்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 26, 2022

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தமிழர் தலைவரைச் சந்தித்தார்


பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி தமிழர் தலைவரைச் சந்தித்து பயனாடை அணிவித்து கலைஞர் புத்தகத்தை வழங்கினார். அமைச்சருக்கு தமிழர் தலைவர் இயக்க நூல்களை வழங்கினார் (திருச்சி பெரியார் மாளிகை, 26.6.2022)

மூத்த பெரியார் பெருந்தொண்டர் அருப்புக்கோட்டை தங்கசாமியின் 94ஆவது பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகள் தெரிவித்தார். பெரியார் உலக நிதியாக 1 கிராம் தங்க நாணயத்தை தங்கசாமி தமிழர் தலைவரிடம் வழங்கினார். (மதுரை, 25.6.2022)

விருதுநகர் மாவட்டத் தலைவர் இல.திருப்பதியின் 45ஆவது பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். கழக வளர்ச்சி நிதியாக தமிழர் தலைவரிடம் ரூ.1,000 வழங்கினார்.

மதுரை ராஜேஸ்வரி ராமசாமி இணையர் பெரியார் உலகத்திற்கு ரூ.10000 நன்கொடை வழங்கினர். உடன் தஞ்சை மு.அய்யனார் உள்ளார்.

திமுக மாநில இலக்கிய அணி துணை அமைப்பாளர் எம்.பழனியப்பன் தமிழர் தலைவரிடமிருந்து இயக்க நூல்களைப் பெற்றுக் கொண்டார். (விராலிமலை)

மூடநம்பிக்கை ஒழிப்பு கிராம பிரச்சாரத்தில் பங்கேற்று மந்திரமா தந்திரமா கலை நிகழ்ச்சியை செய்த ஈட்டி கணேசனுக்கு தமிழர் தலைவார் பயனாடை அணிவித்தார். 

விராலிமலை ஒன்றிய தலைவர் ஓவியர் சி.குழந்தைவேல் அவர்களின் மகன் தந்தை பெரியாரின் உருவத்தை வரைந்து தமிழர் தலைவரிடம் வழங்கினார். குடும்பத்தினர்க்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார்.


No comments:

Post a Comment