பிஜேபி ஆட்சியின் மதவாதம் ஹிஜாப் தடையை எதிர்த்த மாணவிகள் கல்லூரியில் இருந்து நீக்கமாம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 9, 2022

பிஜேபி ஆட்சியின் மதவாதம் ஹிஜாப் தடையை எதிர்த்த மாணவிகள் கல்லூரியில் இருந்து நீக்கமாம்!

பெங்களூரு, ஜூன் 9- கருநாடகா வில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் (முக்காடு) அணிவ தற்கு எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து, அம்மாநில அரசு ஹிஜாப் அணிய தடை விதித் தது. இதை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் 6 பேர் தொடுத்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், கருநாடக அரசு ஹிஜாப் தடையை வலுப்படுத்தும் வகையில் பி.யூ.கல்லூரி மாணவர்களுக்கு சீருடையை கட்டாயமாக்கி உத்தரவிட்டது. இதையடுத்து உடுப்பி, தட்சண கன்னடா, மங்களூரு, சிமோகா உள் ளிட்ட மாவட்டங்களில் முஸ் லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதிக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். தட்சண கன்னடா மாவட்டம் உப்பினங்காடி அரசு முதல் தர‌ பி.யூ கல்லூரி யில் முஸ்லிம் மாணவிகள் 24 பேர் ஹிஜாப் அணிய அனு மதிக்கக் கோரி கடந்த ஒரு வாரமாக வகுப்பை புறக்க ணித்து அமைதிப் போராட் டத்தில் ஈடுபட்டனர்.

கல்லூரி நிர்வாகம் ஹிஜாப் அணிவதற்கு தடை இருப்ப தாலும், சீருடை கட்டாயமாக் கப்பட்டு இருப்பதாலும் ஹிஜாபை அனுமதிக்க முடி யாது என திட்டவட்டமாக தெரிவித்தது.

இருப்பினும் 24 முஸ்லிம் மாணவிகள் தொடர் போராட் டத்தில் ஈடுபட்டனர். இதற்கு எதிராக ஏபிவிபி மாணவ அமைப்பினர் காவி சால்வை அணிந்து போராட்டம் நடத் தப்போவதாக அறிவித்தனர்.

இந்நிலையில், ஹிஜாப் தடைக்கு எதிராக போராடிய முஸ்லிம் மாணவிகள் 24 பேரை இடைநீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தர விட்டுள்ளது.

இதுகுறித்து புத்தூர் சட்ட மன்ற உறுப்பினரும் பாஜக  கல்லூரி மேம்பாட்டு குழு தலைவருமான சஞ்சீவ் மட் டாந்தூர் கூறுகையில், ‘‘கல் லூரி மேம்பாட்டு குழு தீர்மா னத்தின்படி கல்லூரி நிர்வா கம் மாணவர்களை இடை நீக்கம் செய்துள்ளது'' என்றார்.

No comments:

Post a Comment