தமிழ்நாட்டில் 771 பேருக்கு கரோனா பாதிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 23, 2022

தமிழ்நாட்டில் 771 பேருக்கு கரோனா பாதிப்பு

சென்னை, ஜூன் 23 தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 30 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  சென்னையில் 345, செங்கல் பட்டில் 126, திருவள்ளூரில் 32 மற்றும் காஞ்சிபுரத்தில் 18 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது கோவை 55, கன்னியாகுமரி 44, திருநெல்வேலி 19, மதுரை 17, திருச்சி 13, ராணிப்பேட்டை மற்றும் தூத்துக்குடியில் தலா 12 பேருக்கும், வேலூரில் 11 பேருக்கும் தேனி மற்றும் விருதுநகரில் தலா 9 பேருக்கும், சேலத்தில் 7 பேருக்கும் சிவகங்கை மற்றும் திருவண்ணாமலையில் தலா 6 பேருக்கும் நாமக்கல்லில் 5 பேருக்கும் ஈரோடு மற்றும் நீலகிரியில் தலா 4 பேருக்கும் கிருஷ்ணகிரி மற்றும் திருப்பூரில் தலா 3 பேருக்கும், மயிலாடுதுறை மற்றும் திருவாரூரில் தலா 2 பேருக்கும் கடலூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கரூர், தென்காசி, தஞ்சாவூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய 7 மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கரோனா உறுதியாகியுள்ளது. மொத்தம் 20,227 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 419 ஆண்கள் 352 பெண்கள் என மொத்தம் 771 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 


No comments:

Post a Comment