புதுடில்லி, ஜூன் 23 5 மாநிலங்கள் மற்றும் டில்லியில் உள்ள 3 மக்களவை மற்றும் 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள அசம்கர் மற்றும் ராம்பூர் மற்றும் பஞ்சாபில் உள்ள சங்ரூர் ஆகிய 3 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. அதேபோல, டில்லியில் உள்ள ராஜிந்தர் நகர், ஜார்கண்டில் உள்ள மந்தர், ஆந்திராவின் ஆத்மகூர் மற்றும் அகர்தலாவில் உள்ள டவுன் போர்டோவாலி, திரிபுராவில் உள்ள சுர்மா மற்றும் ஜபராஜ்நகர் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. மேலும், தலைநகர் டில்லியில் காலியாக உள்ள ராஜிந்தர் நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிவ டையும். தேர்வு முடிவுகள் ஜூன் 26ஆம் தேதி வெளியிடப்படும். ஆம் ஆத்மி கட்சியின் ராகவ் சதா மாநிலங்களவைக்கு தேர்ந் தெடுக்கப்பட்டதையடுத்து, காலியான டில்லி ராஜிந்தர் நகர் தொகுதிக்கு இடைத்தேர்த லுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
Thursday, June 23, 2022
டில்லி, பஞ்சாப், உ.பி. உள்பட 6 மாநிலங்களில் இன்று இடைத்தேர்தல்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment