'அக்னிபத்' திட்டத்தின் பாதிப்பு ராகுல் காந்தி எச்சரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 23, 2022

'அக்னிபத்' திட்டத்தின் பாதிப்பு ராகுல் காந்தி எச்சரிக்கை

புதுடில்லி, ஜூன்.23 நேஷனல் ஹெரால்டு வழக்கில் 5 நாட்கள் விசாரணையை முடித்த ராகுல் காந்திக்கு தங்கள் ஆதரவை தெரிவிப் பதற்காக டில்லி காங்கிரஸ் தலைமை அலுவ லகத்தில் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் நேற்று (22.6.2022) கூடினர். அவர்கள் மத்தியில் ராகுல் பேசியதாவது:

அமலாக்கத்துறை விசாரணையின்போது எனக்கு ஆதரவாக இருந்த கட்சித் தொண்டர் களுக்கு நன்றி. வேலை வாய்ப்பின்மையே நாட்டின் மிகப்பெரிய பிரச்சினையாக உள் ளது. தற்போது வேலைவாய்ப்புக்கு கடைசி இடமாக இருந்த ராணுவத்தின் கதவும் மூடப்பட்டுவிட்டது. ஒரே பதவி, ஒரே ஓய் வூதியம் என்று பேசியவர்கள் ஒரு பதவியும் இல்லை, ஓய்வூதியமும் இல்லை என்கின் றனர். அக்னிபத் திட்டம் மூலம் ராணுவத்தை ஒன்றிய அரசு பலவீனப்படுத்தி வருகிறது. வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றது போல அக்னிபாதை திட்டத்தை பிரதமர் மோடி திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.


No comments:

Post a Comment