மேற்கு திசை காற்று வேக மாறுபாடு: தமிழ்நாட்டில் 30ஆம் தேதி வரை பரவலாக மழை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 28, 2022

மேற்கு திசை காற்று வேக மாறுபாடு: தமிழ்நாட்டில் 30ஆம் தேதி வரை பரவலாக மழை

சென்னை, ஜூன் 28  மேற்கு திசை யில் இருந்து வீசும் காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரியில் வரும் 30ஆம் தேதி வரை பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. 

தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் தற்போது படிப்படி யாக குறைந்து வருகிறது. அதே நேரத்தில் கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது.  

இதற்கிடையே, மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகம் மாறியுள்ளதால், 30ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக் கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் மழை பெய்யும்.  

காற்றின் வேகம் அதிகரிக்கும் என்பதால்  அந்த பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment