சென்னை, ஜூன் 18 சென்னை மாவட்ட ஆட்சியர் சு.அமிர்த ஜோதி வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: துணிவு மற்றும் சாகச செயல்களுக்கான”கல்பனா சாவ்லா” விருது ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டு முதலமைச்சரால் சுதந்திர தின விழாவின் போது வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டை சேர்ந்த துணிச்சலான மற்றும் வீர சாகசச் செயல் புரிந்த ஒரு பெண் இந்த விருதினை பெற தகுதியுடையவராவர்.இயற்கை பேரழிவுகள், விபத்துகள், நீரில் மூழ்கும் நிகழ்வுகள், தீ தொடர்பான நிகழ்வுகள், திருட்டு மற்றும் துணிச்சலான முயற்சிகள் ஆகியவற்றின் போது பல தனிநபர்கள் நிகழ்த்திய பல்வேறு வீர சாகச நிகழ்வுகள் தொடர்பாக இவ்விருது வழங்கப்படுகிறது.
தகுதியுடையவர்கள் சம்பந்தப் பட்ட மாவட்ட ஆட்சி தலைவர் மூலமோ அல்லது https://awards.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ அரசு செயலாளர், பொதுத்துறை, தலைமை செயலகம், சென்னை-9க்கு வருகிற 30ஆம் தேதிக்கு முன்பாக அனுப்பி வைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment