சென்னை, ஜூன். 28 தமிழ் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் ஆண்கள் 746, பெண்கள் 715 என மொத்தம் 1,461 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 543 பேர் தொற்றால் பாதிக் கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழ் நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 69,805 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 34 லட்சத்து 23,557 பேர் குணமடைந் துள்ளனர். நேற்று (27.6.2022) மட்டும் 697 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழ் நாடு முழுவதும் 8,222 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. தமிழ் நாட்டில் நேற்றுமுன்தினம் கரோனா தொற்று பாதிப்பு 1,472 ஆகவும், சென்னையில் 624 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களாக தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்தியாவில்...
முன்னதாக, இன்று காலை நேர நிலவரப்படி இந்தியாவில் புதிதாக 17,073 பேர் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 94,420 பேர் நோய் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 15,208 பேர் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக நாட்டில் 197.11 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment