புதுடில்லி, மே 23 வானிலை பாதிப்பால் டில்லியில் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட் டது.
தலைநகர் டில்லியில் கோடை பாதிப்பு காரணமாக தினமும் அதிகபட்ச வெப்ப நிலை பதிவாகி வருகிறது. கடுமையான வெப்பத் தினால் பொதுமக்களின் அன் றாடப் பணிகளில் பாதிப்பு ஏற் பட்டு உள்ளது.
இந்நிலையில், டில்லியில் இன்று அதிகாலை விஜய் சவுக் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் லேசாக சாரல் மழை பெய்தது.
மழையால் வெப்பம் சற்று தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது. நகரின் பல பகுதிகளில் பலத்த காற்று வீசியது. மழைநீர் சாலை களில் ஓடிய நிலையில், வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட் டபடி சற்று மெதுவாகச் சென்றன. டில்லியில் பெய்த மழை மற்றும் பலத்த காற்று வீச்சு ஆகியவற்றால் ஏற்பட்ட வானிலை பாதிப்புகளால் டில்லி விமான நிலையத்தில் விமா னப் போக்குவரத்து பாதிக்கப்பட் டது.
No comments:
Post a Comment