சென்னை, மே 15- மாநிலங்களவையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தி.மு.க. எம்.பி.க்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், அ.தி.மு.க.வைச் சேர்ந்த நவநீத கிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ.விஜயகுமார் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் நிறை வடைகிறது.
காலியாகப் போகும் இந்த 6 இடங்களுக்கும் அடுத்த மாதம் (ஜூன்) 10ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தற்போதைய நிலையில் ஒரு எம்.பி. வெற்றி பெற 34 சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகள் தேவைப்படும். தமிழ்நாடு சட்டமன்றத்தில் தி.மு.க.வுக்கு 159 சட்டமன்ற உறுப் பினர்கள் உள்ளதால் 4 எம்.பி.க்கள் தி.மு.க.வுக்கு கிடைக்கும். இந்நிலையில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை கட்சியின் தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (15.5.2022) அறிவித்துள்ளார். திமுக சார்பில் தஞ்சை கல்யாணசுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், வழக்கு ரைஞர் இரா. கிரிராஜன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு இடம் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment