உதய்ப்பூர், மே 15 விலைவாசி உயர்வுக்கு எதிராக காங் கிரஸ் கட்சியின் அடுத்த கட்ட போராட்டம் குறித்து உதய்பூரில் தலைவர்களு டன் சோனியா ஆலோ சனை நடத்தினார்.
இன்னும் இரண்டே ஆண்டுகளில் நாடு அடுத்த நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கிறது. அதை எதிர்கொள்வதற் கும், தொடர் தோல்வி களால் துவண்டு போய் உள்ள கட்சிக்கு புத்துயிரூட்டவும் ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் காங் கிரஸ் 3 நாள் சிந்தனை அமர்வு மாநாட்டினை ‘நவ் சங்கல்ப் சிந்தன் ஷிவிர்’ என்ற பெயரில் நடத்தி வருகிறது. இந்த மாநாட்டின் 2ஆவது நாளான இன்று, பெருகி வரும் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட் டம் மற்றும் ஒன்றிய அர சின் தவறான கொள்கை கள் குறித்து அடுத்த கட்ட போராட்டம் நடத்தி மக் களிடம் எடுத்துச் செல்வ தற்கான வழிவகைகள் குறித்து ஆராயும் முக்கிய அமர்வு நடந்தது.
கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலை மையில் நடந்த இந்த அமர்வில் கட்சி பொதுச் செயலாளர்கள், மாநில காங்கிரஸ் தலைவர்கள், பல்வேறு மாநில சட்டப் பேரவை காங்கிரஸ் தலை வர்கள் கலந்துகொண் டனர்.
கட்சியின் மேனாள் தலைவர் ராகுல் காந்தி இந்த அமர்வில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் ஒன்றிய அரசுக்கு எதி ரான போராட்டத்தின் அடுத்த கட்டத்தை திட் டமிடுமாறு அழைப்பு விடுத்தார்.
பணவீக்கம், விலை வாசி உயர்வு, பொருளா தார மந்தநிலை, வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் படும் துயரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்னி றுத்தி காங்கிரஸ் கட்சி கடந்த நவம்பர் 14ஆம் தேதி முதல் ‘ஜன் ஜாக்ரன் அபியான்' என்ற பெயரில் போராட்டங்கள் நடத்தி மக்களை சந்தித்து வரு வது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த போராட் டத்தின் 2ஆவது கட்டத்தை நடத்த காங்கி ரஸ் திட்டமிட்டு வருகிறது.
No comments:
Post a Comment