புதுடில்லி, மே 9- கவுகாத்தி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுதான்சு தூலியா, குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.பர்திவாலா ஆகிய இருவரையும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான கொலீஜியம் ஒன்றிய அரசுக்கு பரிந்துரைத்தது.
அந்த பரிந்துரையை ஏற்று சுதான்சு தூலியா, பர்திவாலா ஆகிய இருவரையும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில் நீதிபதிகள் சுதான்சு தூலியா, பர்திவாலா ஆகிய இருவரும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இன்று (9.5.2022) பதவியேற்றுக் கொண்டனர். உச்ச நீதிமன்ற வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட அரங்கில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத் தார். இந்த இரு நீதிபதிகள் பதவி யேற்பின் மூலம், உச்சநீதிமன்றம் மீண்டும் அதன் முழு நீதிபதிகள் எண்ணிக்கையான 34-அய் எட்டி யுள்ளது.
No comments:
Post a Comment