இயற்கை மரங்களிலிருந்து தயாரிக்கப்படும், பிளைவுட் எனப்படும் ஒட்டுப் பலகைகள் இன்று பரவலாகிவிட்டன.
பிளைவுட்டில், ஒட்ட உதவும் பார்மால்டிஹைட் அடிப்படையிலான பிசின்கள், நச்சு வாயுக்களை கசியவிடுபவை. இதற்கு மாற்றாக, சிட்ரிக் அமிலம் மற்றும் குளுகோஸ் கலவையை உருவாக்கியுள்ளனர் சீனாவின் தெற்கு காட்டுயிர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள்.
அதிக அளவு சிட்ரிக் அமிலம்- சிறிதளவு குளுகோஸ் கொண்ட கலவையை மரப் பட்டைகளுக்கிடையில் பூசி, அவற்றை 392 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தில் வைத்து, ஆறு நிமிடங்கள் அழுத்தினால், வலுவான பிளைவுட் கிடைப்பதாக சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment