பள்ளிகள் திறப்பு தேதி ஒத்திவைப்பு கல்வித்துறை அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 14, 2022

பள்ளிகள் திறப்பு தேதி ஒத்திவைப்பு கல்வித்துறை அறிவிப்பு

சென்னை, மே 14 - 1 முதல் 12ஆம் வகுப்பு வரை 2022-- 2023ஆம் கல்வி யாண்டிற்கான வகுப்புகள் துவங்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது

ஒவ்வொரு ஆண்டும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் மாதத்தில் தொடங்குவது வழக்கம். அதனைத் தொடர்ந்து 10ஆம் வகுப்பு மாண வர்களுக்கான பொதுத் தேர்வும், பிற வகுப்புகளுக்கான ஆண்டு இறுதித் தேர்வு நடைபெறும். ஆனால், நடப்பு கல்வி ஆண்டில் பள்ளி நேரடி வகுப்புகள் தாமதமாக தொடங்கியதால், பொதுத் தேர்வு கள் மற்றும் இறுதித் தேர்வுகள் இம்மாதம் இறுதிவரை நடை பெறுகிறது.

அதன்படி, 12ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு மே மாதம் 5ஆம் தேதி தொடங்கி 28ஆம்தேதியுடன் நிறைவு பெறுகிறது. அதேபோல், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 9ஆம் தேதி ஆரம்பித்து 31ஆம் தேதி வரையும், 10ஆம் வகுப்புக்கு மே மாதம் 6ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி வரையிலும் நடைபெறுகிறது.

இதுதவிர 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை ஆண்டு இறுதித்தேர்வு நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டது. 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே 13ஆம் தேதி கடைசி வேலைநாளாக அறிவிக்கப்பட்டது.

அந்தவகையில், தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் சனிக் கிழமை (மே 13)  முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட் டுள்ளது.

தொடர்ந்து, கோடை விடுமுறை முடிவடைந்து அடுத்த மாதம் ஜூன் 13 ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப் பட்டிருந்தது.

இந்நிலையில், 1 முதல் 12ஆம் வகுப்பு வரை 2022- -2023ஆம் கல்வி யாண்டிற்கான வகுப்புகள் துவங் கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப் படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. 

ஏற்கெனவே ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் புதிய தேதி பின்னர் அறிவிக் கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment