தமிழ்நாட்டில் 44 பேருக்கு கரோனா பாதிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 14, 2022

தமிழ்நாட்டில் 44 பேருக்கு கரோனா பாதிப்பு

சென்னை, மே 14 தமிழ்நாட்டில் நேற்று 44 பேர் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

தமிழ்நாட்டில் கரோனா தொற்று பாதிப்பு கணிசமாக கட்டுக்குள் உள்ளது. கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு 50-க்கும் கீழே பதிவாகி வருகிறது. கடந்த 24 மணி நேர கரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு;-

தமிழ்நாட்டில் நேற்று (13.5.2022) புதிதாக 16 ஆயிரத்து 524 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஆண்கள் 25 பேரும், பெண்கள் 19 பேரும் உள்பட 44 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 28 பேரும், செங்கல்பட்டில் 4 பேரும் உள்பட 9 மாவட்டங் களில் மட்டும் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. 29 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை. தமிழ்நாட்டில் தொடர்ந்து 57ஆவது நாளாக கரோனாவால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. இதுவரை 38 ஆயிரத்து 25 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.  58 பேர் கரோனா நோயில் இருந்து குணமடைந்து  வீடு திரும்பியுள்ளனர். இதுவரை தமிழகத்தில் 34 லட்சத்து 16 ஆயிரத்து 107 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கரோனா பாதிப்பு 

 இந்தியாவில் தினசரி கரோனா தொற்று பாதிப்பில் பெரிதான மாற்றம் இல்லை. நேற்று முன்தினம் (13.5.2022)  2,827 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. நேற்று (14.5.2022) இந்த எண்ணிக்கை சற்று அதிகரித்து   2,841  ஆக  இருந்தது. 24 மணி நேரத்தில் 2,858  பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  நாட்டில் இதுவரையில் இந்த தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 16,254 லிருந்து 4,31,19,112 ஆக உயர்ந்தது.

இந்தியாவில் ஒரே நாளில் 3,355 பேர் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தனர். இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,25,73,460 லிருந்து 4,25,76,815 ஆக உயர்ந்துள்ளது.  

நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 18,604 லிருந்து 18,092 ஆனது. இந்தியாவில் கரோனாவுக்கு ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்தனர். இதுவரை 5,24,201 பேர் உயிரிழந்தனர்.  

இந்தியாவில் ஒரே நாளில் 15,04,734 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  இந்தியாவில் இதுவரை 191.15 கோடி டோஸ் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

No comments:

Post a Comment