அரசு அலுவலகத்திற்குள் கோயில் கட்டுமானம்: நடவடிக்கை எடுக்கப்படுமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 8, 2022

அரசு அலுவலகத்திற்குள் கோயில் கட்டுமானம்: நடவடிக்கை எடுக்கப்படுமா?

கிருட்டினகிரி மாவட்ட தொழில் மய்யம் (சிட்கோ) அலுவலகம் அருகாமையில் அலுவலக வளாகத்தையொட்டி யப் பகுதியில் ஒன்றிய - மாநில அரசு ஆணைகளுக்கு புறம் பாக அரசு அலுவலகத்திற்குள் புதியதாக கோவிலில் கட்டு மானப் பணிகள்  நடைபெற்று வருகின்றது. அரசுக்கு சொந்த மான எந்த இடத்திலும் குறிப்பிட்ட மத வழிப்பாட்டு இடங்கள் அல்லது மத சின்னங்களோ அமைக்கக் கூடாது என்று நீதிமன்ற தீர்ப்புகளும், ஒன்றிய மாநில அரசு ஆணைகளும் உள்ள நிலையில் சிட்கோ அலுவலக வளாகத்திற்குள் சட்ட விரோத கோவில் கட்டுமான பணி நடைபெற்று வருவதை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சட்ட விரோத கோவில் கட்டுமான பணியை தடுக்க கிருட்டினகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் நடவடிக்கை எடுப்பாரா?


No comments:

Post a Comment