சென்னை, மே 18 தமிழ்நாடு மக்கள் நல்வாழ் வுத் துறை நேற்று (17.5.2022) வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டில் நேற்று 12,573 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 34 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
நேற்று அதிகபட்சமாக சென்னையில் 17 பேருக்கும், செங்கல்பட்டில் 5 பேர், காஞ்சிபுரம் 4 பேர், கோவை 3, ஈரேடு, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், தூத்துக்குடி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு நபருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மற்ற 29 மாவட்டங்களில் பாதிப்பு ஏதும் இல்லை.
No comments:
Post a Comment