இலங்கை மக்களுக்கு நிவாரணப் பொருட்கள்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை பிரதமர் நன்றிக் கடிதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 6, 2022

இலங்கை மக்களுக்கு நிவாரணப் பொருட்கள்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை பிரதமர் நன்றிக் கடிதம்

சென்னை,மே.6- இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என அறிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, அந்நாட்டு பிரதமர் மகிந்த ராஜபக்சே நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே எழுதியுள்ள நன்றிக் கடிதம் வருமாறு:-

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாங்கள் கொண்டுவந்த தனித் தீர்மானத்தின்படி இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலையில் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள மக்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து உணவு, அத்தியா வசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என்று தாங்கள் அறிவித்துள்ளமை தங்களது நல்லெண்ணத்தைக் குறித்து நிற்கின்றது. இலங்கைப் பொருளாதார நெருக்கடியை அண்டை நாட்டுப் பிரச் சினையாகப் பார்க்காது மனிதாபிமான அடிப்படையில் நோக்கும் தங்களிற்கும், தமிழ்நாடு மாநில அரசிற்கும் இலங்கை மக்கள் சார்பாக மிகுந்த நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 

இவ்வாறு இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment