நாட்டின் பல்வேறு பிரிவுகளில் இருந்தும் நீதி பதிகள் நியமிக்கப்படும்போதுதான், பன்முகத் தன்மையும், ஒட்டுமொத்த சமூகத்தின் கண்ணோட்டங் களும், உணர்வுகளும் பிரதிபலிக்க ஏதுவாக இருக்கும், பிரதமர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
தி ஹிந்து:
சமையல் எரிவாயு உருளை விலையேற்றம் காரணமாக, கடந்த நிதியாண்டில், மோடி அரசின் முதன்மை நலத்திட்டமான பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா வின் 90 லட்சம் பயனாளிகள் தங்கள் சிலிண்டர்களை நிரப்பவில்லை. மேலும் 1 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் தங்கள் எரிவாயு உருளைகளை ஒரு முறை மட்டுமே நிரப்பியுள்ளனர்.
தி டெலிகிராப்:
சில்லறை பணவீக்கம் எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 7.79 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த எண்கள் தொடர்ச்சியாக நான்காவது மாதமாக ரிசர்வ் வங்கியின் உயர் சகிப்புத்தன்மை அளவான 6 சதவீதத்தை விட அதிகமாக உள்ளது.
டைம்ஸ் ஆப் இந்தியா:
பாஜகவை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரே வழி நேரடியான மோதலே தவிர, போட்டி வகுப்புவாதமல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார்.
ஆங்கிலம் தடைகளை உடைக்க உதவுகிறது என இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கருத்து.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment