காவல்துறை பணியிலிருந்து ஓய்வு பெற்றபின் திராவிடர் கழகத்தில் இணைந்து சேலம் மாநகர துணைச்செயலாளராக பணியாற்றி வரும் போலீஸ் இராஜூ அவர்களின் வாழ்விணையர் செல்வி (வயது 56) கடந்த 15-5-2022 அன்று அதிகாலை 2-00 மணியளவில் மறைவுற்றார். அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து 16.5.2022 அன்று சேலம் மாவட்டத் தலைவர் கி.ஜவகர் தலைமையில் இரங்கல் கூட்டத்தில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் பழனி. புள்ளையண்ணன், மாவட்டச் செயலா ளர் அ.ச. இளவழகன், மேட்டூர் மாவட்டத் தலைவர் கிருட்டின மூர்த்தி, மண்டலத் தலைவர் சி.சுப்பிரமணியம், ஓமலூர் ஒன்றிய தலைவர் சவுந்திரம், மாநகர தலைவர் இளவரசன், மாவட்ட அமைப்பாளர் இராவண பூபதி, துணைத் தலைவர் பரமசிவம், இராஜி அவர்களின் உறவினர் மாது, ஆகியோர் இரங்கல் உரை ஆற்றினர். போலீஸ் இராஜி அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். திராவிடர் கழகக் குடும்பங்களின் சார்பாக மறை வுற்ற செல்வி அவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. நேற்று (17.5.2022) காக்கையன் மின் மயானத்தில் இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment