தாஜ்மகால் அறைகளில் ரகசியம் எதுவும் இல்லை தொல்லியல் துறை அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 17, 2022

தாஜ்மகால் அறைகளில் ரகசியம் எதுவும் இல்லை தொல்லியல் துறை அறிவிப்பு

 புதுடில்லி, மே 17- உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி மாவட்ட பாஜக ஊடக பிரிவு பொறுப்பாளர் ரஜ்னீஷ் சிங், தாஜ்மகால் வளாகத்தில் மூடப்பட்டு கிடக்கும் 20 அறைகளை திறக்க உத்தரவிட கோரி கடந்த 4ஆம் தேதி அல காபாத் உயர் நீதிமன்றத் தில் மனு தாக்கல் செய் தார். 

இந்து கடவுளர் சிலை இருக்க வாய்ப்பு உள்ள தால் அந்த அறைகளை திறந்து சோதனை செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு கடந்த 12.5.2022 அன்று நீதிபதி கள் டி.கே. உபாத்யாய் மற் றும் சுபாஷ் வித்யார்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசார ணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் கோரிக் கையை நிராகரித்த நீதி பதிகள் மனுவை தள்ளு படி செய்தனர்.

இந்நிலையில், இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்அய்) தனது பருவ இதழில் தாஜ்மகால் அறை களின் சில புகைப்படங் களை வெளியிட்டுள்ளது. அந்த அறைகளில் ரகசி யம் எதுவும் இல்லை என்று ஏஎஸ்அய் அதிகா ரிகள் தெரிவித்துள்ளனர். பழுதடைந்த நிலையில் உள்ள அந்த அறைகளை பராமரிக்கும் பணி நடை பெறுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment