பிரிட்டனிலுள்ள அஞ்சல் சேவையான யு.கே. ராயல் மெயில், விரைவில் ட்ரோன்கள் வாயிலாக அஞ்சல்களை முகவரிதாரர்களுக்குக் கொண்டு சேர்க்கத் திட்டமிட்டுள்ளது.
இதற்கென, லண்டனிலுள்ள ஆளில்லா பறக்கும் வாகனத் தயாரிப்பாளரான விண்ட்ரேசர்சிடமிருந்து 200 புதிய ட்ரோன்களை ராயல் மெயில் வாங்கவிருக்கிறது.
ஒரு ட்ரோனால், 100 கிலோ எடைஉள்ள அஞ்சல்களை தூக்க முடியும்.
அஞ்சல்காரரை அனுப்பக் கட்டுபடியாகாத, தொலைதூர முகவரிகளுக்கு ட்ரோன் சேவை உதவும். முதல் கட்டமாக, 50 வழித்தடங்களில் ட்ரோன் அஞ்சல் சேவை துவங்கப் போகிறது ராயல் மெயில்.
No comments:
Post a Comment