பொன்னேரி, மே 14- நீட் எதிர்ப்பு, தேசிய கல்வி கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு குறித்து கும்மிடிப் பூண்டி மாவட்டம் பொன்னேரியில் தெருமுனை கூட்டம் 8.5.2022 அன்று கெ. முருகன் தலைமையில் நடைபெற்றது. பொன்னேரி நகர செயலாளர் மு.சுதாகர் வரவேற் றார்.
கும்மிடிப்பூண்டி மாவட்ட துணைத் தலைவர் சு.இராஜசேகர், மாவட்ட மேனாள் தலைவர் செ. உதயகுமார், மீஞ்சூர் ஒன்றிய தலை வர் மு.க. தமிழ்ச்செல்வன், பொன் னேரி விடுதலை வாசகர் வட்ட தலைவர் வழக்குரைஞர் கே. மூர்த்தி முன்னிலை வகித்தனர்.
திராவிடர் கழக அமைப்பு செயலாளர் வி.பன்னீர்செல்வம், கும்மிடிப்பூண்டி மாவட்டத் தலை வர் புழல் த. ஆனந்தன் தொடக்க உரையாற்றினர்.
மாநில மகளிர் பாசறை அமைப் பாளர் வழக்குரைஞர் சே.மெ. மதிவதனி சிறப்புரை ஆற்றினார்.
பொன்னேரி நகர தலைவர் வே. அருள் நன்றி கூறினார்.
தி.மு.க, திராவிட இயக்கத் தமி ழர் பேரவை, விடுதலை சிறுத்தை கள் கட்சி.
கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகளை சார்ந்த தோழர்கள் பங்கு பெற்ற னர். நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடை பெற்றது.
No comments:
Post a Comment