டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்
ஞானவாபி பிரச்சினை, அயோத்தி பிரச்சினை போல பல ஆண்டுகள் நீட்டிக்கப்படும் என எழுத்தாளர் ஆகார் படேல் கருத்து.
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மே 27 கூட்ட முதலமைச்சர் நிதிஷ் குமார் முடிவு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
ஞானவாபி போன்ற பிரச்சினைகளை எழுப்பி ஹிந்து பெரும்பான்மைவாதம் காட்டுவது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என பேராசிரியர் அசுதோஷ் வார்ச்னி கருத்து.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
மாநில கூட்டாட்சி தத்துவத்தை மோடி அரசு புல்டோசர் கொண்டு இடிக்கிறது. ஹிட்லர் ஆட்சியை விட பாஜகவின் ஆட்சி மோசமானது என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா குற்றம்சாட்டி உள்ளார்.
ரயில் கட்டண சலுகையை ரத்து செய்து உள்ளதற்கு மூத்த குடிமக்கள் இயக்கம் மோடி அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது..
- குடந்தை கருணா
No comments:
Post a Comment