பழனி, மே 11- பழனியில் 8.5.2022 அன்று பழனி திண்டுக்கல் மாவட்ட தொழிலாளரணி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பழனி கழக மாவட்ட தலைவர் பொ.பெ இர ணியன் தலைமை தாங்கினார். பழனி நகர செயலாளர் சி. ராதா கிருஷ்ணன், மாவட்ட இளைஞ ரணி தலைவர் பொன் அருண் குமார், மண்டல இளைஞரணி செயலாளர் குண அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாநில தொழிலாளர் அணி செயலாளர் மு.சேகர் பேசு கையில் தொழிலாளர்கள் நலன் பாதுகாப்பு, தொழிலாளர்களுக்கு உன்டான உரிமை எப்படியெல் லாம் கிடைக்கிறது. அவர்களை நாம் எப்படி அணுகுவது, அவர் களுக்கு நாம் எப்படி சேவை செய் வது உள்ளிட்ட பல்வேறு கருத்துக் களை சிறப்பாக பேசினார்.
இந்நிகழ்ச்சியில் திராவிடர் தொழிற்சங்க பேரவை தலைவர் மோகன், தொழிற்சங்க செயலாளர் சிவகுருநாதன், திராவிடர் கழக திண்டுக்கல் மாவட்ட தலைவர் இரா.வீரபாண்டி, மாவட்ட செய லாளர் வழக்குரைஞர் மு.ஆனந்த முனிராசன், திண்டுக்கல் மண்டல தலைவர் நாகராஜன், திண்டுக்கல் மாநகர செயலாளர் கருணாநிதி, கோவை மாவட்ட தொழிற்சங்க மாவட்ட தலைவர் ஆனந்தசாமி, மாவட்ட செயலாளர் வெங்கடாச் சலம் ஆகியோர் தொழிலாளர்க ளுக்கு உன்டான உரிமைகளைப் பற்றி பேசினர்.
நிகழ்ச்சியின் முடிவில் திண்டுக் கல் மாவட்ட பெரியார் கட்டுமா னம் அமைப்புசாரா தொழிலாளர் நலச்சங்கம் புதிதாக துவங்கப்பட் டது. திண்டுக்கல் மாவட்ட தொழிற் சங்கத்தின் மாவட்ட தலைவராக பொ.பெ.மகேந்திரனும், மாவட்ட செயலாளராக வழக்குரைஞர் ஆனந்த முனிராசனும், பொருளா ளரா பவுன்ராஜும் நிர்வாகிகளாக தேர்தெடுக்கப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியில் அமைப்பு சாரா தொழிலாளர்களும், திரா விடர் கழக நிர்வாகிகளும் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment