இந்தியாவிலிருந்து அளிக்கப்படுகின்ற உதவிப் பொருட்கள் தமிழர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 14, 2022

இந்தியாவிலிருந்து அளிக்கப்படுகின்ற உதவிப் பொருட்கள் தமிழர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்

இலங்கை நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் வலியுறுத்தல்

சென்னை,மே14- சென்னையில் இலங்கை நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் சிவாஜி லிங்கம் செய்தியாளர்களிடம் கூறியதா வது: தமிழ் தேசிய இனப் பிரச்சினையை ஒடுக்க பணத்தை கடனாகப் பெற்றது, படைகளை மிகப்பெரிய அளவில் பெருக் கியது தான் தற்போதைய இலங் கையின் பொருளாதார நெருக் கடிக்கு முக்கிய காரணம். போர் முடிந்த பிறகும், 2 லட்சம் படைகள் தமிழர் வாழும் பகு திகளில் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழர் நிலம் ஆக்கிரமிப்பு செய் யப்படுகிறது. இலங்கை தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் நிலையான அமைதி ஏற்படாது.

தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அமைப்புகள், மக்கள் உள்ளிட்ட 8 கோடி தமிழர்கள் உட்பட 130 கோடி இந்திய மக்களும் இலங்கை தமிழர்களின் உரிமை பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண ஒருங்கிணைந்து ஆதரவு அளிக்க வேண்டும்.

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் மற்றும் இனப்படு கொலைக்கு, மகிந்த ராஜபக்சே, கோத்தபய ராஜபக்சே, ரணில் விக்ரமசிங்கே, சந்திரிகா பண் டாரநாயக்க, மைத்ரிபால சிறி சேனா, மேனாள் ராணுவத் தளபதிகள் என அனைவரும் சர்வதேச நீதிமன்றம் முன்பு நிறுத்தப்பட வேண்டும்.

தமிழ் ஈழம் அமைப்பதற்கான பொது வாக்கெடுப்பு இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்தி ரேலியா ஆகிய நாடுகளை உள் ளடக்கிய குவாட் அமைப்பின் மூலம் நடத்த வேண்டும்.

இந்தியாவிலிருந்து அனுப் பப்பட்ட உதவிப் பொருட்கள் அங்கு இருக்க கூடிய தமிழர் களுக்குச் சென்று சேருகிறதா என்பதை தூதரகங்களின் மூலம் உறுதி செய்ய வேண்டும். தமிழ் நாட்டில் இருந்து அனுப்பக் கூடிய உதவிப் பொருட்கள் தமிழர்களுக்குச் சென்று சேரு வதை உறுதி செய்ய தமிழ்நாடு அரசு குழு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அதன்படி தமிழ்நாடு அரசு 4 அய்ஏஎஸ் அதிகாரிகளை நிய மித்திருப்பது மகிழ்ச்சி அளிக் கிறது.

இலங்கையில் இருக்கக் கூடிய மலையகத் தமிழ் மக்களின் வாழ்வு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டிக் கொடுத்த சிறிய வீட்டில், இடிந்து விழுமோ என்ற பயத் துடன்தான் தற்போதும் வாழ்ந்து வருகிறார்கள். எனவே, மலை யகத் தமிழர்களுக்கு சிறப்பு திட்டங்களை இந்தியா செயல் படுத்த வேண்டும்.

ரணில் விக்ரமசிங்கே மோசடி யில் ஈடுபட்டவர். ஏற்கெனவே மக்களை ஏமாற்றியவர். மகிந்த ராஜபக்சே சீறி கடிக்கும் பாம்பு என்றால், ரணில் விக்ரமசிங்கே சீறாமல் கடிக்கும் பாம்பு.

மத்திய வங்கியில் கோடான கோடி ஊழலில் ரணில் விக்ரம சிங்கே பெயர் உள்ளது. அவர், தமிழர்களுக்கு விரோதமானவர். சிங்கள இனவாதம்தான் அவரி டம் மேலோங்கி இருக்கும்.

-இவ்வாறு சிவாஜிலிங்கம் கூறினார்.

No comments:

Post a Comment