8 ஆண்டுகளில் ஒன்றிய அரசின் தோல்விகள் பட்டியல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 28, 2022

8 ஆண்டுகளில் ஒன்றிய அரசின் தோல்விகள் பட்டியல்

நாடு முழுவதும் அரசு துறைகளில் 62 லட்சம் காலிப் பணியிடங்கள்: காங்கிரஸ் சாடல்

புதுடில்லி, மே 28 நாடு முழுவதும் ஒன்றிய மற்றும் மாநில அரசு துறைகளில் 62 லட்சத்துக்கு மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளதாக பட்டியல் வெளியிட்டு காங் கிரஸ் கட்சி குற்றம் சாட்டி யுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு பதவியேற்று 8 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது. இதையொட்டி மத்திய அரசின் தோல்விகளை பட்டியலிட்டு காங்கிரஸ் கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில் குறிப்பாக, நாடு முழு வதும் லட்சக்கணக்கான காலிப் பணியிடங்கள் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள காங்கிரஸ் கட்சி, இவற்றை நிரப்ப நட வடிக்கை எடுக்காத ஒன்றிய அரசை கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது. 

காங்கிரஸ் வெளியிட்டுள்ள அந்த காலியிட பட்டியலில் முக்கியமாக, ஒன்றிய அமைச் சகங்கள் மற்றும் துறைகளில் 9 லட்சத்துக்கு அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. மேலும் பொதுத்துறை வங்கிகளில் 2 லட்சம் காலியிடங்கள், 1.68 லட்சம் சுகாதார ஊழியர் பணியிடங்கள் மற்றும் 1.76 அங்கன் வாடி பணியாளர் பணியிடங் கள் காலியாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதைப்போல ராணுவத்தில் 2.55 லட்சம் பணியிடங்களும், ஒன்றிய ஆயுதப்படைகளில் 91,929 பணியிடங்களும், மாநில காவல் துறையில் 5.31 லட்சம் பணியிடங்களும், பல்வேறு நீதிமன்றங்களில் 5 ஆயிரம் பணியிடங்களும் காலியாக இருப்ப தாக குற்றம் சாட்டியுள்ள காங் கிரஸ் கட்சி, மாநில அரசுகளின் பல்வேறு துறைகளில் 30 லட்சத்துக்கு மேற்பட்ட காலியிடங்கள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த பட்டியலை வெளியிட்ட கட்சியின் செய்தி தொடர் பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, இளைஞர்கள் பணிக்காக ஏங்குவதாகவும், ஆனால் அரசுகள் காலியிடங்களை நிரப்பவில்லை எனவும் குற்றம் சாட்டினார். அதேநேரம் ஒன் றியத்தில் மோடி அரசு பதவியேற்ற இந்த 8 ஆண்டுகளில் நாடு முழுவதும் மத மோதல்கள் அதிகரித்து இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார். 

மதக்கலவரங்கள்

அந்தவகையில் கடந்த 2016-2020- ஆம் ஆண்டு காலத்தில் 3,400 மதக்கலவரங்கள் நடந் திருப்பதாக உள்துறை அமைச் சகம் கூறியிருப்பதை சுட்டிக் காட்டிய அவர், ஆனால் 8 ஆண்டு கால பா.ஜனதா ஆட்சி யில் நடந்துள்ள மதக்கல வரங்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டும் என்றும் கூறினார். 

கடந்த 2015 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில், தாழ்த் தப்பட்ட பிரிவினர் மீதான வன்முறை 12 சதவீதம் அதிகரித்து இருப்பதாக தெரிவித்த அவர், கடந்த 8 ஆண்டுகளில் காஷ்மீரில் 548 பாதுகாப்புப் படையினர், 324 பொதுமக்கள் கொல்லப் பட்டு இருப்பதாகவும், இந்திய- சீன எல்லை தொடர்ந்து பதற் றத்தில் இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

No comments:

Post a Comment