சென்னை, மே 21 தமிழ்நாட் டில் ஆண்கள் 24, பெண் கள் 13 என மொத்தம் 37 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 20 பேர் தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 54,801 ஆக அதி கரித்துள்ளது.
இதுவரை 34 லட்சத்து 16,461 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று மட்டும் 44 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழ்நாடு முழுவதும் 315 பேர் சிகிச்சையில் உள்ள னர். நேற்று உயிரிழப்பு இல்லை. தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் கரோனா தொற்று பாதிப்பு 42 ஆகவும், சென்னையில் 23 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில்முன்னதாக, நேற்று காலை நேர நிலவரப்படி இந்தியாவில் புதிதாக 2,259 பேர் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக ஒன்றிய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 15,044 பேர் நோய் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2,614 பேர் கடந்ந 24 மணி நேரத்தில் தொற்று பாதிப் பில் இருந்து மீண்டுள்ள தாக தெரிவிக்கப்பட்டுள் ளது. ஒட்டு மொத்தமாக நாட்டில் 191.96 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment