சென்னை, மே 20- கட்டட திட்ட அனுமதி விண்ணப்பம் 30 நாட்களை கடந்து நிலுவையில் இருந்தால் புகார் அளிக் கலாம் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை மாநகராட்சிக்கு உட் பட்ட பகுதிகளில் பெறப்பட்ட கட்டட திட்ட அனுமதிக்கு மாறாக கட்டப்படும் கட்டடங்கள் மற்றும் திட்ட அனுமதி பெறாமால் கட்டப்படும் கட்டடங் களின் மீது நடவடிக்கை எடுக்க தொடர் புடைய வார்டு உதவி பொறியாளர் அல்லது இளைநிலை பொறியாளர், பகுதி உதவி செயற்பொறியாளர், மண் டல செயற்பொறியாளர்கள் கள ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க அதிகாரம் வழங்கி சென்னை மாநக ராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உத்தரவிட்டார்.
இதன்படி தொடர்புடைய பொறி யாளர்கள் தங்கள் பகுதிகளிள் கட்டு மான பணி நடைபெறும் இடங்களுக்குச் சென்று கட்டுமான நிலையிலேயே கண்டிப்பாக ஆய்வு செய்து கட்டட திட்ட அனுமதி உள்ளதா எனவும், அனு மதிப்படி கட்டுமானம் நடைபெறுகி றதா என்பதையும் கண்காணிக்க என்று அறிவுறுத்தப்பட்டது. இந்த ஆய்வின் படி கட்டட திட்ட அனுமதி இல்லாத கட்டடங்கள் மற்றும் திட்ட அனும திக்கு மாறாக கட்டு மானம் நடைபெறும் கட்டடங்களின் கட்டுமான பணியை கட்டுமான நிலையிலேயே நிறுத்த அறிவிக்கை வழங்க உத்தரவிடப்பட்டது
திட்ட அனுமதி இல்லாத கட்டடங் கள் மற்றும் திட்ட அனுமதிக்கு மாறாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களில் நுழைவு வாயில் கதவுகள் மற்றும் ஜன்னல்களை அகற்ற அறிவிக்கை வழங்கி நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
இந்த உத்தரவின்படி சென்னையில் இதுவரை 2,075 கட்டிங்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதில் 467 கட் டங்கள் விதிகளை மீறி கட்டப்பட்டுள் ளது தெரியவந்துள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், "விதிமீறல் கட்டிடம் தொடர்பாக சென்னை மாநகராட்சி தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. தற் போது கண்டறியப்பட்டுள்ள 467 கட்டங்களுக்கு அறிவிக்கை அளித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையை எதிர்த்து அவர் நகர்புற வளர்ச்சி துறையில் மேல்முறை யீடு செய்யலாம். இந்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
குறிப்பாக திட்ட அனுமதி தொடர் பான விண்ணப்பங்களின் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவரும். சம்பந்தபட்ட அதிகாரி 30 நாட்களுக் குள் திட்ட அனுமதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இதை மீறி 30 நாட்களுக்கு மேல் திட்ட அனுமதி தொடர்பான விண்ணப்பம் நிலுவையில் இருந்து பொதுமக்கள் முன்வந்து ரிப்பன் மாளி கைளில் புகார் அளிக்கலாம். இந்த மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment