வடகொரியாவில் மேலும் 2.63 லட்சம் பேருக்கு கரோனா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 21, 2022

வடகொரியாவில் மேலும் 2.63 லட்சம் பேருக்கு கரோனா

பியாங்யாங்,மே 21 - வடகொரியாவில் ஒமைக்ரான் வைரசால் தூண்டப்பட்ட கரோனா அலை வேகமாக பரவுகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2.63 லட்சம் பேருக்கு கரோனா அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன. இதனால் அங்கு தொற்று பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 22 லட்சத்தைக் கடந்துள்ளது. நேற்று (20.5.2022) காலையுடன் முடிந்த ஒரு நாளில் தொற்றுக்கு 2 பேர் பலியாகினர். இதனால் இதுவரை இந்த தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 12.5.2022 அன்று முதல் கரோனா பரவலைத் தடுப்பதற்காக பொதுமுடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment