வழக்குரைஞர் தீ. சோழவேந்தன் - ராஜலட்சுமி, ஆதித், அதவ் ஆகியோரின் 'சோழன்' இல்லத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார். பொதுக் குழு உறுப்பினர் அ. தீர்த்தகிரி - சுசீலா ஆகியோருக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். அ. தீர்த்தகிரி - சுசீலா குடும்பத்தினர் சார்பில் 'பெரியார் உலக'த்திற்கு ரூ.25,000/- நன்கொடை வழங்கினர். (தருமபுரி, 22.4.2022)
தருமபுரியில் பெரியார் மன்றம் அருகேயுள்ள தந்தை பெரியார் சிலை அருகே 'நீட்' எதிர்ப்பு பிரச்சாரப் பயணத்தை குறிக்கும் நினைவு கல்வெட்டினை தமிழர் தலைவர் ஆசிரியர் திறந்து வைத்தார். (22.4.2022)படம் 1: திருப்பத்தூரில் நடைபெற்ற 'நீட்' எதிர்ப்பு பரப்புரைக் கூட்டத்தில் 'நீட்' எதிர்ப்பு பிரச்சாரப் புத்தகத்தை காமராசர் நூற்றாண்டு நினைவு அறக்கட்டளை கணேஷ் மல்வெளியிட மதிமுக மாவட்ட தலைவர் கண்ணதாசன் பெற்றுக் கொண்டார். படம் 2: தருமபுரியில் திமு.க. மேனாள் மாவட்ட செயலாளர்
ஆர். சின்னசாமி அவர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். (22.4.2022)
No comments:
Post a Comment