மூன்று முக்கிய பிரச்சினைகளை முன்னிறுத்தி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் தலைமையில் நாகர்கோவிலில் தொடங்கி (3.4.2022) 21 நாட்கள் - 4700 கி.மீட்டர் பயணித்து நேற்றிரவு (23.4.2022) அரக்கோணத்தில் நிறைவு செய்து, பிரச்சாரப் பெரும் பயணத் தோழர்கள் இரவு இரண்டு மணி யளவில் சென்னை வந்து சேர்ந்தனர்.
நாளை (25.4.2022) மாலை 6.30 மணிக்கு சென்னை பெரியார் திடலில் நடக்கவிருக்கும் நிறைவு விழாவில், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, 'சமூகநீதிக்கான சரித்திர நாயகர்' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திராவிட இயக்கப் போர்வாள் வைகோ ஆகியோர் பங்கேற்கின்றனர்.
அனைவரும் வருகவே!
- திராவிடர் கழகம்
No comments:
Post a Comment