பொய் சொல்வதற்கென்றே பல யுடியூப் சேனல்களை நடத்தும் பார்ப்பனர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 16, 2022

பொய் சொல்வதற்கென்றே பல யுடியூப் சேனல்களை நடத்தும் பார்ப்பனர்கள்

தற்போது யுடியூப் சேனல்கள் பிரபலமாகிவிட்டது. யார் வேண்டுமாலும் துவங்கலாம், நல்ல கருத்துக்கள் தொடர்ந்து கூறிவந்தால் அது மக்களிடையே பரவுகிறது. 

கிராமத்துக்காரர்கள் பல யு டியூப் சேனல் வைத்துள்ளார்கள். அதில் கிராமங்களில் செய்யப்படும் உணவு வகைகள் அவர்களின் வாழ்க்கை முறை நகரங்களில் உள்ள நாம் மறந்துபோன பல நிகழ்வுகளோடு அவர்கள் இன்றும் உண்மையாக வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்.

 அதில் ஒரு உண்மை இருக்கிறது, உணவுமுறைகள் வியப்பூட்டும் பல சுவைநிறைந்த அழகியலோடு செய்துகாட்டுகிறார்கள். அது ஈசல் பொரியலாகட்டும், மீன் முட்டை உப்புமாவாகட்டும், உப்புக்கண்டம் போட்டு காயவைத்து பொரித்துச்சாப்பிடும் இறைச்சியாகட்டும் - இன்னும் பல உள்ளன.

ஆனால் தங்களை மெத்தப்படித்தவர்கள் என்று கூறிக் கொள்ளும் பார்ப்பனர்களில் சிலர் யுடியூப் சேனல் நடத்துகின்றனர். அவர்கள் கூறுவதை கட்டாயம் எந்த பார்ப்பனர்களும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆனால் அதனை பார்ப்பனர் அல்லாதோர் பார்வையில் பட்டு அவர்களின் அறிவை மழுங்கடிக்கும் முயற்சியில் கூட்டாக வேலை பார்க்கிறார்கள்.

 அப்படித்தான் குருகுல் பன் என்ற யு டியூப் சேனல் மக்களை முட்டாள்கள் ஆக்கும் வேலையைப் பார்த்து வருகிறது. 

 சமீபத்தில் அதில் சாகித்ய அகதாமி விருதுபெற்ற ஒரு சிறீமதி விசாகா அரி Smt.Vishakha Har  பேட்டி கொடுத்திருந்தார்.   அவர் பேசும் போதே அவரது முகபாவனையே காட்டிகொடுத்தது இது சுத்த பொய் என்று இருப்பினும் இதனை பார்ப்பவர்கள் நம்பவேண்டுமே என்பதற்காக ஆங்கிலத்திலும் இந்தியிலும் ஆங்காங்கே ஒன்றிரண்டு தமிழ் சொல்லையும் சேர்த்து கதாகாலட்சேபம் போல் செய்திருப்பார். 

  சுமார் ஒருமணி நேரம் ஓடும் அந்த காட்சிப் பதிவில்  அனைத்துமே உண்மைக்குப் புறம்பானவை அதைத்தவிர வேறு ஒன்றுமில்லை.

  எடுத்துக்காட்டாக, பெண்கள் தலைவிரி கோலமாக இருந்தால் அவர்களின் சக்தி வீணாகி விடுகிறதாம். அதாவது தனித்து இருக்கும் ஒவ்வோரு முடியும் புவி ஈர்ப்பு விசையை எதிர்த்து நிற்பதால் பெண்களின் சக்தி வீணாகி விடுகிறதாம். 

ஆகையால் தான் ஜடைமுடி அழகாக பின்னி அதில் பூவைக்கிறார்களாம் ஏன் பூ என்றால் அந்தப்பூ தலைமுடியின் ஈர்ப்புவிசையை வாங்கிகொண்டு விடுகிறதாம் நெற்றியில்  பொட்டு வைப்பது  மூன்றாம் கண்ணைத் திறப்பதாம் அதாவது ஞானக்கண்!  

இதைச் சொல்லியே நித்தியானந்தா என்ற சூத்திரச்சாமியார் கைலாசா என்ற நாட்டை உருவாக்கிவிட்டதாக கதைவிடுகிறார். அரசமைப்புச்சட்டத்தையே மதிக்காது, மத்திய அமெரிக்க கண்டத்தில் ஏதோ ஒரு நாட்டின் தீவில் இருந்துகொண்டு கதைவிட்டுக் கொண்டு இருக்கிறார். 

 ஒருவேளை இந்த குருகுல் பன் என்ற யுடியூப் சேனல் நடத்துபவர்களும் நித்தியானந்தாவைப் போல் தீவை வாங்கிவிட முடிவு செய்துவிட்டார்கள் போலும்,  ஆனால் இவர்கள் விடும் கதை களை சிலாகித்து பதில் அளித்திருப்பவர்கள் பெரும்பாலானோர் வட இந்திய படித்த உயர்ஜாதியினர் என்பது அவர்களின் பெயர்களிலேயே புலப்படுகிறது.  ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சாணக்கியன் என்னும் ஏமாற்றுப் பேர்வழி கூறியதை இவர்கள் அப்படியே அச்சுப்பிறழாமல்  கடைப் பிடித்து வருகிறார்கள். 

 பொய் சொல்லுங்கள் அதைத் தொடர்ந்து சொல்லுங்கள். அந்தப் பொய்களை உண்மையானவைகளைப்போல் கூட சில பொய் களைச் சேர்த்துச் செல்லுங்கள், அந்தப்பொய் உண்மை என நம்ப வைக்க சிலரை நியமித்து அவர்களை புகழ்ந்து பேசச் சொல்லுங்கள், அப்படிப் புகழ்ந்து பேசுவதை மக்களிடம் கொண்டு சேருங்கள், அந்தப் பொய்கள் உண்மையா இல்லையா என்று அதனைக் கேட்போர்களை சிந்திக்கவிடாதீர்கள் என்று கூறியதை  இன்றும் கடைப்பிடித்து மக்களை ஏமாற்றி வயிறுவளர்க்கிறார்கள் என்பது இது போன்ற காணொலிகள் மூலம் தெரியவருகிறது.


No comments:

Post a Comment