நூல்கள் எதிர்கால வழிகாட்டிகள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 23, 2022

நூல்கள் எதிர்கால வழிகாட்டிகள்!

ஆதி மனிதன் தன் எண்ணங்களையும் சிந்தனைகளையும் எதிர்காலச் சந்ததியின ருக்குப் பயன்படவேண்டும் என்ற நோக்கத் தில் அவற்றை எழுத்துகளாக கற்பாறைக ளில் செதுக்கி வைத்தான். அவை முதலில் ஓவிய உருவங்களாகக் காணப்பெற்றன. பின்னர் களிமண்ணால் உருவாக்கப்பட்டன. கற்களிலும் அவற்றை உருவாக்கிப் பாது காத்தான். அவை இன்றும் காலத்தால் அழியாத சின்னங்களாக நமக்கு வழிகாட் டியாக உள்ளன. காலங்கள் மாறமாற கல் லில் வடித்த அந்தச் செயல் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து பாஸ்பரஸ் தாளாக வும். தோலாகவும். ஓலைச் சுவடிகளாகவும் உருவெடுத்தன. இன்று நம்மிடையே காணப்பெறும் பழம்பெரும் இலக்கண நூலான தொல்காப்பியமும், இலக்கிய அற நூலான திருக்குறளும், சங்க இலக்கியங் களும், பெரியபுராணம் போன்றனவும் அய்ம்பெரும் காப்பியங்களும் அந்நாளில் பனை ஓலைகளில் ஓலைச்சுவடிகளாக உருவானவைகள்தாம். அப்படி ஓலைச் சுவடிகளாக உருமாற்றம் பெற்ற நூல்கள் எல்லாம் பாதுகாக்கப்பெற்று. பின்னாளில் அச்சு இயந்திரக் கண்டுபிடிப்பால் அச்சேற் றப்பட்டு அழியாத காவியங்களாக ஆக்கம் பெற்றன. இப்படி அச்சு இயந்திரம் கண்டு பிடிக்கப்படுவதற்கு முன்பாக வேதங்களும், வேத மந்திரங்களும், நாட்டுப்புறப் பாடல் களும் மனிதனின் சிந்தனையில் இடம் பெற்று வாய்மொழியாகவே வழங்கி வந்தன.  எடுத்துக்காட்டாக மகமதியர்களின் வேதப் புத்தகமான ‘குரான்’ என்னும் புனிதநூல் தற்போதைய வடிவமாக உருப்பெறும் முன்னர் ‘ஹாமிஸ்’ என்போரிடம் காலங் காலமாக மனப்பாடமாக இருந்துவந்தது குறிப்பிடத்தக்கது.

ஜெர்மனியரான ஜான் கூட்டன் பர்க் என்பார் அச்சு இயந்திரத்தைக் கண்டு பிடித்த காரணத்தால் நூல்களை உருவாக்கு வதில் பெரும்புரட்சி ஏற்பட்டது. ஏராளமான அளவில் நூல்கள் வெளிவர ஆரம்பித்தன. பல அற்புத நூல்களை உள்ளடக்கிய புத்த கங்கள் பல நூலகங்களில் இடம்பெற்றன. அவற்றின்வழி மனித வாழ்விற்கு நூலகங் கள் கலங்கரை விளக்கமாக இருந்து வழி காட்டி வருகின்றன. இப்படி ஒருபுறம் நூலக வளர்ச்சி ஏற்பட்டு வந்தாலும், அலெக் ஸாண்டிரியா, யாழ்ப்பாண நூலகங்கள் எரி யூட்டப்பட்டதன் விளைவாக எதிர்காலச் சந்ததியினருக்குப் பயன்படவேண்டிய பல அரிய நூல்கள் அவர்களுக்குக் கிடைக்க வியலாத ஒரு நிலை உருவானதை நாம் மறப்பதற்கு இல்லை. அச்சு இயந்திரங்களின் வரவால் பல்லாயிரக்கணக்கான நூல்கள் வெளிவந்த காரணத்தால் அவற்றைப் பாது காத்து எதிர்காலச் சந்ததியினருக்கு வழங்க நூலகங்கள் தேவைப்பட்டன. அப்படிப் பல்கிப் பெருகிய நூல்கள் நூலகங்களில் நூலடுக்குகளில் அடுக்கி வைக்கப்பெற்றன. இவ்வாறு அடுக்கி வைக்கப்பெற்ற நூல் களை நூலகத்திற்கு வரும் வாசகர்கள் பயன்படுத்துவதற்கு ஏற்ப நூலறிஞர்கள் பல்வேறு வழிகளைக் காணத் தொடங்கினர். அப்படி உருவானதுதான் நூல் பகுப்பு முறை. இத்தகு பகுப்புமுறை வாசகர்களுக்கு வசதியாக அமைந்தது. 

கண் இமைக்கும் நேரத்தில் ஆயிரக் கணக்கான நூல்கள் அச்சாகும் இக்கால கட்டத்தில், நூலகங்களில் பல இலட்சக் கணக்கான நூல்கள் பல்வேறு தலைப்பு களில் இடம் பெறுகின்றன. இப்படி நூலகங் களுக்கு தரும் நூல்களை அடுக்கி வைப்ப தற்கு நூலகங்களில் இடவசதி இல்லாத நிலை ஏற்படுகிறது. மேலும் பழைய நூல்கள் காலத்தால் அழியும் நிலையில் உள்ளன. எனவே நூல்களைப் பாதுகாப்பதற்கு அவற்றை ‘மைக்ரோ பிலிம்‘ செய்யப்பட்டு நூலகங்களில் வாசகர்களின் வசதிக்காக வைக்கும் நிலை இன்று நூலகங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இம்முறை வாசகர் களுக்கு ஒரு வரப்பிரசாதம் எனலாம். இதுதவிர இன்று நூலகங்களில் கணிப்பொறி வசதி செய்யப்பட்டு உலகில் ஓரிடத்தில் இருக்கும் தகவலை மறுநொடியில் நமக்கு வழங்கக்கூடிய நிலையும் நூலகங்களின் வழி நமக்குக் கிடைக்க இன்று வழியேற் பட்டுள்ளது. உலகை ஒரு குடைக்கீழ் இயங்கவைக்கும் நிலையை இன்று கணிப் பொறிகள் நம்மிடையே நூலகங்களின் வழி உருவாக்கி உள்ளன.

(ஆதாரம்: ‘புலவர் அரசு‘ எழுதிய ‘நூலகத் தகவல் களஞ்சியம்‘ என்ற நூலிலிருந்து பக். 64-65)


No comments:

Post a Comment