‘ஆளுநர் பதவியே தேவையில்லை’ தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ் திட்டவட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 28, 2022

‘ஆளுநர் பதவியே தேவையில்லை’ தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ் திட்டவட்டம்

அய்தராபாத்,ஏப்.28- அய்தராபாத்தில் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் மாநாடு நேற்று (27.4.2022) நடந்தது. இதில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பேசியதாவது:

ஆளுநர் பதவியால் மறைந்த முதலமைச்சர் என்.டி.ராமாராவ் பதவி இழந்தார். பின்னர் மீண்டும் மக்கள் அவரை முதலமைச்சராக தேர்ந்தெடுத்தனர். அப்படிப்பட்ட என்.டி.ராமா ராவுக்கே ஆளுநர் பதவி சினிமா காட்டி விட்டது. ஆளுநர் பதவியை சிலர் சுய நலத் திற்காக பயன்படுத்துகின்றனர். மராட்டிய மாநிலத்தில் மாநில முதலமைச்சர்  சட்டமன்ற மேலவைக்கான உறுப்பினர்களாக 12 பேரை ஆளுநருக்கு சிபாரிசு செய்துள்ளார். இதனை மாநில ஆளுநர் கண்டுகொள்ளாமல் உள்ளார். தமிழ்நாடு, மேற்கு வங்க மாநிலங்களிலும் இதுபோன்ற பஞ்சாயத்துகளே நடக்கின்றன. நாட்டில் புதிய அரசியல் சக்தி உருவாக வேண்டும். இதற்கு டி.ஆர்.எஸ். உறுதுணையாக இருக்கும். நாட்டின் அரசியல் சூழல் மீது கட்சிகள் ஒன்றிணைந்து ஆலோசனை நடத்த வேண்டும். காந்தியாரைச் சுட்டுக் கொன்றவனை வழிபடுவது கொடுமையிலும் கொடுமை. மத அரசியல் நடத்தி நாட்டை எவ்வழியில் அழைத்து செல்கிறார்களோ எனும் அச்சம் ஏற் படுகிறது. -இவ்வாறு தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பேசினார்.


No comments:

Post a Comment