ஒரு படத்தைக் கொடுத்து, அதில் இருப்பவற்றை விளக்கச் சொன்னால், இன்றைய செயற்கை நுண்ணறிவு மென் பொருள்களால், எளிதாக செய்து விட முடியும். ஆனால், ஒரு சிறிய வர்ணனையைக் கொடுத்து, அதற்கேற்ற படத்தை வரைந்து தரச் சொன்னால், முடியுமா?ஓப்பன் ஏ.அய்., என்ற நிறுவனம், "டால் இ 2" என்ற, அதி நவீன செயற்கை நுண்ணறிவு மென்பொருளை உருவாக்கியுள்ளது.
சில சொற்களில், ஒரு காட்சி விளக்கத்தை கொடுத்தால் போதும். அதை மட்டும் வைத்து, அசல் புகைப்படம் அல்லது ஓவியம் போலவே, அந்தக் காட்சியை, டால் இ 2 வரைந்து தருகிறது.இது, சிலருக்கு எளிதானது போலத் தோன்றலாம். ஆனால், சில சொற்களை மட்டுமே வைத்து, அவ்வளவு நுட்பமான படத்தை வரைவது மிகவும் கடினம். பேச்சு மொழியை செயற்கை நிரல்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். பிறகு, குறிப்பில் இருக்கும் குறைந்த அளவு தகவல்களை வைத்து, துல்லியமாக, நம்பும்படியாக படத்தை உருவாக்க வேண்டும்.'குளிர் காயும் அடுப்புக்கு அருகே, தொப்பி அணிந்த எலிகளின் குடும்பம்' என்ற குறிப்பை மட்டும் வைத்துக் கொண்டு, டால் இ 2 வரைந்த, துல்லியமான படத்தைப் பாருங்கள்.
No comments:
Post a Comment