பா.ஜ.க. ஆளும் கருநாடகாவில் தலை விரித்தாடும் தீண்டாமைக் கொடுமை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 8, 2022

பா.ஜ.க. ஆளும் கருநாடகாவில் தலை விரித்தாடும் தீண்டாமைக் கொடுமை

கொப்பால், ஏப். 8 கருநாடக அரசின் தீண்டாமை ஒழிப்புத் திட்டத்துக்குத் தாழ்த்தப்பட்ட சமூக சிறுவனின் பெயர் சூட்டப்பட்ட நிலையில், அந்தக் கிராமம் சிறுவனின் குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளது. அதனால், வாழ்வதற்கு வேறு இடம் தேடி அந்தக் குடும்பம் செல்லும் நிலை உருவாகியுள்ளது.

கருநாடக மாநிலம் முழுவது முள்ள கிராமப் பஞ்சாயத்துகளில், ஜாதிப் பாகுபாட்டுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த, கருநாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அரசு, `வினய சமரஸ்ய யோஜனாஎனும் திட்டத்தை அறிவித்துள்ளது. மேலும், இந்தத் திட்டம் அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல் 14 அன்று கொடியேற்றித் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருநாடகாவின் கொப்பால் மாவட்டத்திலுள்ள மியாபூர் கிரா மத்தில், 2021-ஆம் ஆண்டு, செப் டம்பர் மாதம் மழையிலிருந்து ஒதுங்குவதற்குக் கோயிலுக்குள் சென்ற தாழ்த்தப்பட்ட சிறுவன் வினய்-யின் குடும்பத்துக்கு கிராம முக்கியஸ்தர்கள் ரூ.25,000 அப ராதம் விதித்தனர். அதைத் தொடர்ந்து அளிக்கப்பட்ட புகாரில்  சிலர் கைது செய்யப்பட்டனர். அதன் பிறகு அவர்கள் அனைவரும் பிணையில் வெளி வந்தனர்.

இதைத் தொடர்ந்து, கருநாடக அரசு தீண்டாமை ஒழிப்புக்கு எதிரான இந்தத் திட்டத்துக்கு `வினய சமரஸ்ய யோஜனா திட்டம்எனப் பெயர் சூட்டியுள்ளது. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு அங்கு வாழும் தாழ்த்தப்பட்ட மக்கள் மேலும் மோசமாக நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும், கிராம மக்கள் வினய் குடும்பத்தை, கிராமத் தைவிட்டே ஒதுக்கி வைத்துள்ள தாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக, தனியார் செய்தி நிறுவனத்துக்கு வினய்-யின் தந்தை சந்திரசேகர் சிவபதாசரா அளித்த பேட்டியில்,

 "அந்தச் சம்பவத்துக்குப் பிறகு ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கொடு மைகள் அதிகரித்தன. நானும் எனது குடும்பமும் கிராமத்தை விட்டு வெளியேறவும், விவசாய நிலம் உள்ளிட்ட சொத்துகளை அப் படியே விட்டுச் செல்ல வேண்டும் எனவும் கட்டாயப் படுத்தப்பட் டோம். தாழ்த்தப்பட்ட மக்களும் கலந்து கொள்வார்கள் என்ப தாலேயே, கிராமத்தில் ஆண்டுக்கு ஒரு முறை வரும் கோயில் விழாவும் ரத்து செய் யப்பட்டது. எங்களுக்கு அவசர உதவி தேவைப்பட்டாலும், அது எங்களுக்குக் கிடைக்காது.

தற்போது, என் குடும்பம் வினய்-யின் தாய்வழிப் பாட்டி ஊரான யெல்பர்காவில் வசிக்கிறது.

இந்தத் தீண்டாமையை ஒழிக்க முடியா விட்டால், அரசுத் திட்டத் துக்குத் என் மகனின் பெயரைச் சூட் டுவது பயனற்றது" எனக் குறிப் பிட்டார்.

யெல்பர்காவில், ``அவர்களுக்கு நிலம் வழங்கவும், வீடு கட்டுவதில் அவர்களுக்கு உதவவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன" என்று சமூகநலத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment