சென்னை, ஏப்.10- இந்தியாவில் அதிவேகமாக வளர்ச்சி கண்டுவரும் வேளாண் வர்த்தக நிறுவனமான வேகூல் ஃபுட்ஸ் குழுமத்தின் ஒரு பிரபல பிராண்டான ஃபிரெஷீஸ், சென்னைவாழ் மக்களுக்காக இட்லி தோசை மாவு (பேட்டர்) என்ற தனது புதிய தயாரிப்பை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த புதிய வொன்டர் இட்லி தோசை மாவு 1 கிலோ பேக்குகளில், சென்னையில் 10000-க்கும் அதிகமான விற்பனையகங்களில் கிடைக்கும்.
இதுகுறித்து இந்நிறுவன தலைமை வர்த்தக அதிகாரி பி.பீ.ரவீந்திரன், கூறியிருப்பதாவது: சென்னை சந்தையில் புதிய சேவர் பேக்கில் ஃபிரெஷீஸ் வொன்டர் இட்லி தோசை மாவை அறிமுகம் செய்வது எங்களுக்கு மகிழ்ச்சியையும், அதிக உற்சாகத்தையும் அளிக்கிறது. வீட்டில் சமையல் செய்யும் போக்கில் கவனத்தில் கொள்ளக்கூடிய அளவிற்கு கலாச்சார மாற்றம் இருப்பதாலும் மற்றும் வீட்டில் பயன்படுத்த சமைக்க எளிதான உணவுப்பொருட்களை விரும்பி வாங்கும் போக்கு அதிகரித்திருப்பதாலும் தரமான தயாரிப்புகளை நாடுகிற நுகர்வோர்களுக்கு இட்லி தோசை மாவு சரியான விருப்பத்தேர்வாக இருக்கும், என்று கூறினார்.
No comments:
Post a Comment