சென்னை, மார்ச் 5 444 காவல் உதவி ஆய்வாளர் பணிகளுக்கு இந்த மாதம் 8 -ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு காவல்துறையில் உள்ள 444 காவல் உதவி ஆய்வாளர் பணிகளுக்கு இந்த மாதம் 8 -ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
இதற்கான தமிழ் தகுதி தேர்வு தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின் படி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் இணைய முகவரியிலும் விண்ணப்பிக்கலாம்.
மார்ச் 8 ஆம் தேதி முதல் ஏப்ரல் 7 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment