வேலை நிறுத்தப் போராட்டம்: தடையில்லா மின்சாரத்தை உறுதி செய்ய மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 28, 2022

வேலை நிறுத்தப் போராட்டம்: தடையில்லா மின்சாரத்தை உறுதி செய்ய மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல்

சென்னை, மார்ச் 28- வேலைநிறுத்தப் போராட்டத்தினால், மின்சேவை பாதிக்காதபடி கூடுதல் பணியாளர் களை நியமிக்க வேண்டும் என ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. 

ஒன்றிய அரசின் கொள்கைகள் தொழிலாளர்கள் நலனை பாதிக்கும் வகையில் இருப்பதாக கூறி, தொழி லாளர்கள் சங்கங்கள் சார்பில் மார்ச் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட் டத்திற்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் பல்வேறு துறை களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள் ளது. 

இந்த நிலையில் ஒன்றிய மின்சார அமைச்சகம் சார்பில் மாநில அரசு களுக்கு மின்பராமரிப்பு ஆலோ சனை தொடர்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 

அந்த அறிக்கையில், நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தி னால், அவசர காலங்களில் செயல்படுவது போல் 24 மணி நேரமும் மின்சேவை பாதிக்காதபடி கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட் டுள்ளது. 

மின்தட்டுப்பாடு குறித்து புகார்கள் வந்தால், அதனை நிவர்த்தி செய்யும் வகையில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைகள் இயக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 

அதே போல் மருத்துவமனை, ரயில்வே உள்ளிட்ட முக்கிய இடங்களில் மின்சார தட்டுப்பாடு இல்லாததை உறுதி செய்ய வேண்டும் ஒன்றிய அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment