கொழும்பு, மார்ச் 8- இலங்கையில் வெளி நாட்டு செலாவணி கையிருப்பு வேகமாக தீர்ந்து வருவதால், கடும் பொருளாதார நெருக்கடி ஏற் பட் டுள்ளது. பணவீக்கம் அதி கரித்து விலைவாசி உச்சத்தில் இருக்கிறது.
நாட்டின் வெளிநாட்டு செலாவணி கையிருப்பு அதல பாதாளத் திற்கு சென்றுள்ளதால், எரி பொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய இயலாத நிலை தொடர்கிறது.
எரிபொருள் வாங்க பணம் இல்லாததால் மின் நிலையங்கள் உற்பத்தியின்றி முடங்கியுள்ளன. இதனால் நாடு முழுவதும் மின் வெட்டு அமல்படுத்தப்படுகிறது. இதனால் பெட்ரோல், டீசல் நிலையங்களில் நீண்ட வரிசைகளில் வாகனங்கள் காத்திருக்கின்றன.
இந்நிலையில், இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப் பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சி னைகளுக்கு தீர்வைப் பெற்றுத் தரக்கோரி நுவரெலியா மற்றும் தலவாக்கலையில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
இதில் அத்தியாவசிய பொருட் களின் விலையேற்றம், மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு, தொடர் மின்வெட்டு, எரிபொருள் தட்டுப் பாடு உள்ளிட்ட பிரச்சினைகளை வலியுறுத்தி அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பி, பதாதை களை ஏந்தி பொதுமக்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment