ஒன்றிய பல்கலைக் கழகங்களில் இளங்கலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கு தேர்வு ஏப்.2ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 29, 2022

ஒன்றிய பல்கலைக் கழகங்களில் இளங்கலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கு தேர்வு ஏப்.2ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை, மார்ச் 29- இளங்கலை பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத் தேர்வை ஏற்க பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) அழைப்பு விடுத்துள்ளது.

ஒன்றிய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளில் மாண வர் சேர்க்கைக்கு பொது நுழைவுத் தேர்வை நடத்த பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) முடிவு செய்திருக்கிறது. அதன்படி அதற்கான தேர்வை தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) நடத்த இருக்கிறது. இதற்கு வருகிற 2ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாநில பல் கலைக்கழகங்களும் பொது நுழைவுத்தேர்வு மூலம் இளங் கலை படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என்று பல்கலைக்கழக மானியக்குழு அழைப்பு விடுத்திருக்கிறது. இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு செயலாளர் ராஜ்னிஷ் ஜெயின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பல்கலைக்கழக மானியக்குழு நிதியுதவி பெறும் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் 2022- - 2023ஆம் ஆண்டு முதல் இளங்கலை படிப்புகளில் சேருவ தற்கு பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வு தொடர் பான விரிவான விவரங்கள்  இணையதளத்தில் வெளியிடப் பட்டு இருக்கிறது.

மாநில பல்கலைக் கழகங்களுக்கு அழைப்பு

தற்போது 12ஆம் வகுப்பு மதிப்பெண் மற்றும் தாங்கள் நடத்தும் நுழைவுத்தேர்வு மூலம் நாட்டில் உள்ள மாநில பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள், பிற உயர் கல்வி நிறுவனங்கள் இளங்கலை படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன. வெவ்வேறு தேதியில் நுழைவுத் தேர்வு நடத்தப்படுவதாலும், சில பல்கலைக்கழகங்களின் தேர்வுகள் ஒரே நேரத்தில் வருவதாலும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பல்வேறு வாரியங்களை (மாநில வாரியம், சி.பி.எஸ்.இ. உள்பட வாரியங்கள்) சேர்ந்த அனைத்து மாணவர் களுக்கும் சமமான வாய்ப்பை வழங்கும் வகையிலும், அனைத்து மாநில பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள், பிற உயர்கல்வி நிறுவனங்களும் தேசிய தேர்வு முகமையின் பொது நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள் மூலம் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள பல்கலைக்கழக மானியக்குழு அழைப்பு விடுக் கிறது.

இவ்வாறு அதில் அவர் கூறி யுள்ளார்.

சீனாவில் படிப்பு

பல்கலைக்கழக மானியக் குழுவும்  (யு.ஜி.சி.), அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலும் (ஏ.அய்.சி.டி.இ.) இணைந்து ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டு இருக்கின்றன. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சீனாவில் சில பல்கலைக் கழகங்கள் நடப்பு மற்றும் வரக்கூடிய கல்வியாண்டுகளுக் கான பல்வேறு பட்டப்படிப்பு களுக்கு அறிவிப்புகளை வெளி யிட்டு இருக்கிறது. கரோனா தொற்றையடுத்து சீன அரசு அங்கு செல்வதற்கு கடுமையான பயண கட்டுப்பாடுகளை விதித் திருக்கிறது.

2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் அனைத்து விசாக் களையும் நிறுத்தி வைத்துள்ளது என்பதை மாணவர்கள் அறிந் திருக்க வேண்டும்.

இந்த கட்டுப்பாடுகள் காரண மாக ஏராளமான இந்திய மாணவர்கள் தங்கள் படிப்பை தொடர சீனாவுக்கு திரும்ப முடியவில்லை. இதுவரை கட்டுப் பாடுகளில் அங்கு எந்த தளர்வும் செய்யப்படவில்லை. மேலும் படிப்புகள்  இணைய வழியில் நடத்தப்படும் என்று ஏற்கெனவே சீன அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது உள்ள விதிகளின் படி, முன் அனுமதியின்றி இணைய வழி முறையில் மட்டுமே மேற்கொள்ளப்படும் இத்தகைய பட்டப்படிப்புகளை பல்கலைக் கழக மானியக்குழு (யு.ஜி.சி.), அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.அய்.சி.டி.இ.) அங்கீகரிக்கவில்லை.

மேற்கூறியவற்றை கருத்தில் கொண்டு வேலைவாய்ப்பு மற்றும் உயர் படிப்பில் மேலும் சிக்கல் களை தவிர்ப்பதற்காக, உயர் கல்விக்கான நோக்கத்தை தேர்ந் தெடுப்பதில் மாணவர்கள் உரிய கவனத்துடன் செயல்பட அறிவு றுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டு உள்ளது.

No comments:

Post a Comment